Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

திருக்குறள்-பதிவு-70


                       திருக்குறள்-பதிவு-70

டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறு என்றும் ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் கொன்ன
சூரிய மையக் கோட்பாடே
சரியானது என்றும் ;
ஜியார்டானோ புருனோ
சொன்ன காரணத்தினால்
ஜியார்டானோ புருனோ
பைபிளில் உள்ள
கருத்திற்கு எதிராக
கருத்து சொல்கிறார் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ திருச்சபைக்கு
எதிராக செயல்படுகிறார் ;
என்று மதத் துவேஷ
குற்றம் அவர் மேல்
சுமத்தப்பட்டு
ஜியார்டானோ புருனோ
1585-ஆம் ஆண்டு
இங்கிலாந்திலிருந்து
வலுக்கட்டாயமாக
வெளியேற்றப்பட்டார்.

1585-ஆம் ஆண்டு
இங்கிலாந்திருந்து
வெளியேற்றப்பட்ட
ஜியார்டானோ புருனோ
பிரான்ஸில்
தங்கினார்
அங்கு அவர்
அரிஸ்டாட்டில்
சொன்ன கருத்துக்கள்
பலவற்றில் உள்ள
குறைகளை சுட்டிக்காட்டி
சரியான விளக்கங்களை
மக்களிடம்
கொண்டு சென்றார்
அரிஸ்டாட்டிலை
எதிர்த்து கருத்து
சொன்ன காரணத்தினால்
ஜியார்டானோ புருனோ
1586-ஆம் ஆண்டு
பிரான்ஸிலிருந்து
வலுக்கட்டாயமாக
வெளியேற்றப்பட்டார்

பிரான்ஸிலிருந்து
வெளியேறிய
ஜியார்டானோ புருனோ
ஜெர்மனி சென்றார்

ஜெர்மனியில்
1586-1587
1587-1588
ஆகிய இரண்டு
ஆண்டுகள்
ஜெர்மனியில் தங்கி
அரிஸ்டாட்டிலின்
கருத்துக்கு எதிர்
கருத்து தெரிவித்த
காரணத்தினால்
ஜெர்மனியின்
கோபத்திற்கு ஆளான
காரணத்தால்
ஜியார்டானோ
புருனோவால்
ஜெர்மனியில்
நீண்ட நாட்கள்
இருக்க முடியவில்லை

1588-ஆம் ஆண்டு
பராகுவே(Prague)
சென்றார்

1591-ஆம் ஆணடு
இத்தாலிக்க நண்பர்கள்
ஜியார்டானோ
புருனோவை
அழைத்ததின் பேரில்
ஜியார்டானோ புருனோ
இத்தாலி சென்றார்
நினைவாற்றல்
கணக்கை எப்படி
பயன்படுத்த வேண்டும்
என்பதையும்,
அதன் மாய
மந்திரங்களை
எப்படி பயன்படுத்த
வேண்டும் என்பதையும்
கற்றுக் கொடுப்பதற்காக
அழைக்கப்பட்டார்

ஜியோவானி மொசிங்கோ
(Giovanni Mocenigo)
எதிர்பார்த்தபடி
ஜியார்டானோ புருனோ
மாயங்கள் எதுவும்
சொல்லித் தரவில்லை
ஏமாந்த
ஜியோவானி மொசிங்கோ
ஜியார்டானோ புருனோ
கிறிஸ்தவ மதத்திற்கு
எதிராக
செயல்படுகிறார்
என்று அவரை
குற்றம் சாட்டி
மதத் துவேஷம்
என்ற போர்வையில்
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபையிடம்
புருனோவைக்
காட்டி கொடுத்தார்

டாலமி சொன்ன
பூமி மையக் கோட்பாடு
தவறு என்றும் ;
சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்ற நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ்
சொன்ன கோட்பாடு
சரியானது என்றும் ;
ஜியார்டானோ புருனோ
சொன்ன
காரணத்திற்காக
பைபிளில் உள்ள
கருத்திற்கு எதிராக
கருத்து சொன்னார் ;
கத்தோலிக்க கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராக
செயல்பட்டார் ;
என்று
1592-ஆம் ஆண்டு
மே மாதம் 22-ஆம் தேதி
ஜியார்டானோ புருனோ
கைது செய்யப்பட்டார்

1593-ஆம் ஆண்டு
ரோமிற்கு கொண்டு
வரப்பட்டார்
அன்றைய போப்
எட்டாம் கிளமெண்ட்
(Pope Clement VIII)
தன்னுடைய நிலையில்
உள்ள உண்மையை
உணர்ந்து கொள்வார்
அதனை புரிந்து
கொண்டு நல்ல
ஒரு முடிவை
எடுப்பார் என்று
ஜியார்டானோ புருனோ
எதிர்பார்த்தார்
ஆனால்
ஜியார்டானோ
புருனோவின்
எதிர்பார்ப்பு
ஈடேறவில்லை
ஜியார்டானோ புருனோ
சிறையில்
அடைக்கப்பட்டார்.

---------  இன்னும் வரும்
---------  19-12-2018
///////////////////////////////////////////////////////////


Share the post

திருக்குறள்-பதிவு-70

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×