ரஜினி என்ற
மூன்றெழுத்து மந்திரம் !!
மனிதன் தன்னுடைய
வாழ்க்கையில்
இரண்டு செயல்களை
செய்வது என்பது மிகவும்
கடினமான விஷயம்
ஒன்று :
இந்த உலகத்தில்
தனக்கென்று ஒரு
இடத்தை பிடிப்பது
இரண்டு :
பிடித்த இடத்தை
தக்க வைத்துக்
கொள்வது
ஒரு சாதாரண
குடும்பத்தில் பிறந்து ;
நடத்துனராக
வேலை செய்து ;
தனக்கென்று ஒரு
தனிப்பட்ட திறமையை
உருவாக்கிக் கொண்டு
அந்த திறமையைப்
பயன்படுத்தி
கடுமையாக உழைத்து ;
ஏளனம்
செய்தவர்களையும்,
எள்ளி
நகையாடியவர்களையும்
புறக்கணித்து ;
உழைப்பின்
மேன்மையாலும்
பழகும் தன்மையாலும்
குணத்தில் உயர்ந்து ;
தனக்குள் குடி
கொண்டிருந்த
நிதானம் ; பொறுமை ;
என்ற இரண்டு
மிகப்பெரிய
சக்தியைப் பயன்படுத்தி
பல்வேறுபட்ட
நிலைகளில் இருந்து
தன்னை வந்து
தாக்கிய எல்லாவிதமான
இடையூறுகளையும்
கடந்து சென்று ;
எதிரிகளை எழவே
விடாமல் வீழ்த்தி ;
துரோகிகள் இனி
துரோகியாக யாரிடமும்
இருக்கக் கூடாது என்று
களை எடுத்து
சூப்பர் ஸ்டார்
என்ற பட்டம்
பெற்றது என்பது
ரஜினி
இந்த உலகத்தில்
தனக்கென்று ஒரு
இடத்தைப்
பிடித்ததைக் குறிக்கும்
பல கோடிகள்
புழங்கும் கனவுத்
தொழிற்சாலையில் ;
வீழ்த்தி விட காத்திருந்த
எதிரிகள் தன்னைச்
சுற்றி நின்று
கொண்டிருந்த நிலையில் ;
தோல்வி காண
வைக்க துரோகிகள்
நேரம் பார்த்துக்
கொண்டிருந்த நிலையில் ;
கீழே விழுவாரா
பார்த்து ரசிக்கலாம்
என்று இரக்கமில்லாத
நெஞ்சங்கள் பார்த்துக்
கொண்டிருந்த நிலையில் ;
அழிந்து விட்டால்
கை கொட்டி சிரிக்கலாம்
என்று பார்த்துக்
கொண்டிருந்தவர்கள்
மத்தியில் ;
உழைப்பால் உயர்ந்து
திறமையால் தன்னை
இந்த உலகத்திற்கு
பிறரிடமிருந்து
வேறுபடுத்தி காட்டி
தனக்கென்று ஒரு
இடத்தைப் பிடித்ததோடு
மட்டுமல்லாமல்
அதை 40 ஆண்டுகளாக
தக்க வைத்துக் கொண்டு
இருக்கும் அந்த
மூன்றெழுத்து
மந்திரத்திற்குப் பெயர் தான்
ரஜினி
இந்த உலகத்தில்
எனக்கென்று
ஒரு இடத்தைப் பிடித்து
அந்த இடத்தைத்
தக்க வைத்துக்
கொள்வதற்கு முன்பு
உலகில் உள்ள
அனைவருடைய
வீட்டு வாசற்படியிலும்
அலுவலக வாசற்படியிலும்
நான் காத்துக் கிடந்தேன் ;
எனக்கென்று ஒரு
இடத்தைப் பிடித்து
அந்த இடத்தை நான்
தக்க வைத்துக்
கொண்டபிறகு
உலகில் உள்ள
அனைவரும் என்
வீட்டு வாசற்படியிலும்
அலுவலக வாசற்படியிலும்
காத்துக் கொண்டிருக்கின்றனர் ;
என்ற வார்த்தை
ரஜினி
என்ற மூன்றெழுத்து
மந்திரத்திற்கு கச்சிதமாக
பொருந்தும் வார்த்தை
ரஜினியைப் பற்றி
ஆயிரம் கருத்து
வேறுபாடுகள் இருந்தாலும்
ரஜினியை நண்பர்களாக
நினைப்பவர்களும் சரி ;
ரஜினிக்கு ரசிகர்களாக
இருப்பவர்களும் சரி ;
ரஜினிக்கு எதிரியாக
இருப்பவர்களும் சரி ;
ரஜினியை எதிரியாக
கருதுபவர்களும் சரி ;
இவர்கள் அனைவரும்
ஒப்புக் கொண்ட
ஒரு விஷயம்
உண்டு என்றால்
அது இது தான்
தன்னுடைய நடிப்பாலும் ;
தன்னுடைய சிரிப்பாலும் ;
தன்னுடைய ஸ்டைலாலும் ;
இந்த உலகத்தை
40 வருடங்களாக
கட்டிப் போட்ட மந்திரம்
என்ற ஒன்று இந்த
உலகத்தில் உண்டு
என்றால் அது
ரஜினி
என்ற மூன்றெழுத்து
மந்திரம் மட்டுமே
என்பதை அனைவரும்
ஒப்புக் கொண்டுள்ளனர்.
12-12-2018 - அன்று
பிறந்தநாள் காணும்
ரஜினி
என்ற மூன்றெழுத்து
மந்திரத்திற்கு என்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் !!
----K.பாலகங்காதரன்
----12-12-2018
///////////////////////////////////////////
Related Articles
This post first appeared on பாலாவின௠பாரà¯à®µà¯ˆà®¯à®¿à®²à¯ â€à®šà®¿à®¤à¯à®¤à®°à¯à®•à®³à¯â€, please read the originial post: here