Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

திருக்குறள்-பதிவு-64


                       திருக்குறள்-பதிவு-64

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
சூரியனை
மையமாக வைத்து
பூமி சுற்றுகிறது
என்ற
சூரிய மையக்
கோட்பாட்டை விளக்கும்
அண்டக்
கோள்களின் சுற்றுகள்
De revolutionibus
Orbium Coelestium
(or)
On the
Revolutions
of the
Heavenly Spheres
என்ற நூலை
கி.பி.1530-ல்
முடித்திருந்தாலும்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அந்த நூலை
அச்சிட்டு
வெளியிடவில்லை

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய நூலை
அச்சிட்டு
வெளியிடாததற்கு
காரணம்
அவருக்கு ஏற்பட்ட
அச்சமே ஆகும்

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
வாழ்ந்த
கால கட்டத்தில்
பைபிளுக்கு
எதிராக கருத்து
சொல்பவர்களையும் ;
கிறிஸ்தவ 
மதத்திற்கு
எதிராக நடந்து
கொள்பவர்களையும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு எதிராக
செயல்படுபவர்களையும் ;
சிறிது கூட
கருணை காட்டாமல்
சிறையில் இட்டு
சித்திரவதைகள்
செய்வதும் ;
உயிரோடு எரித்து
கொல்வதும் ;
போன்ற
விரும்பத்தகாத
கொடுமையான
செயல்கள்
நடைபெற்றுக்
கொண்டிருந்த
காலகட்டம்.

நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தன்னுடைய
கண்டுபிடிப்பு
பைபிளில் உள்ள
கருத்துக்கு
எதிராக இருந்த
காரணத்தினாலும் ;
கிறிஸ்தவ
மதவாதிகளுக்கு
எதிராக இருந்த
காரணத்தினாலும் ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு
எதிராக இருந்த
காரணத்தினாலும் ;
தன்னுடைய
கண்டுபிடிப்பை
நூலாக
அச்சிட்டு வெளியிட
அஞ்சினார்.

கிறிஸ்தவ
மதவாதிகளின்
மிரட்டலுக்கு
பயந்து ;
கத்தோலிக்க
கிறிஸ்தவ
திருச்சபைக்கு
பயந்து ;
தண்டனை என்ற
பெயரில்
அவர்கள்
செய்யும்
கொடுமையான
செயல்களுக்குப்
பயந்து ;
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தனது நூலை
அச்சிடாமலே
வைத்திருந்தார்.

தான் இறந்த
பின்பு தான்
தன்னுடைய நூலான
அண்டக் கோள்களின்
சுற்றுகள்
என்ற நூல் அச்சிட்டு
வெளியிடப் பட
வேண்டும் என்று
யோசித்து
வைத்து இருந்தார்

ஆனால்
மறைவாக அந்நூல்
ஜெர்மனிக்கு எடுத்துச்
செல்லப்பட்டு
நூரம்பர்க்கில் (Nuremberg)
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
அவர்களுடைய
பாதிரி நண்பர்
கெய்ல் ஆஃப்குல்ம்
(Bishop Giese of kulm)
என்பவருடைய
உதவியால்
1543-ல்
அண்டக்
கோள்களின் சுற்றுகள்
De revolutionibus
Orbium Coelestium
(or)
On the
Revolutions
of the
Heavenly Spheres
என்ற நூல்
பதிப்பானது

1543-ஆம் ஆண்டு
மரணப் படுக்கையில்
நோயின் தாக்கத்தால்
துவண்டு போய்
அவதிகள் பலவற்றை
அனுபவித்துக்
கொண்டு ,
இறக்கும் நிலையில்
பக்கவாதம் தாக்கி
ஆழ்ந்த மயக்க
நிலையில் இருந்தார்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
ஆழ்நிலை மயக்கத்தில்
அவர் இருந்த போது
அவர் எழுதிய நூலான
அண்டக் கோள்களின்
சுற்றுகள்
என்ற நூல் அச்சிட்டு
எடுத்துவரப்பட்டு
அவரது கரங்களில்
வைக்கப்பட்டது

---------  இன்னும் வரும்
---------  7-12-2018
///////////////////////////////////////////////////////////


Share the post

திருக்குறள்-பதிவு-64

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×