Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

திருத்தாள்சேர் பதிகம்

1-ஞாழல் சூடனையான் ஞாதல் எங்கனமே
தாழவே வாழும்யான் தாள்சேர்தல் எங்கனமே
சூழமை கங்கைகொண்ட சூரிய முக்கண்காண்
வாழதை யான்பெரும் வார்த்தைசொல் வான்பிறையே
- கலிவிருத்தம்.

2-பவ்வம் கடைந்த பகைவர் இருவரின்
எவ்வம் துடைத்திட எம்மீசர் வந்ததுபோல்
அவ்வம் கலைந்தே அடியேன் கரைசேர
மௌவ்வம் சூடன்தான் சொல்வழிசொல் வான்பிறையே

3-கண்டம் படைத்தே கனகம் படைத்தோன்
கண்டம் பிறந்தே கடந்தே தடஞ்சேர்
பிண்ட மெனையே பிறப்பறுக் குந்தலைவன்
அண்ட மானவனடை அவ்வழிசொல் வான்பிறையே

4-கூந்தலை குன்றாக்கி கூற்றவன் போலாகி
தந்தலை தன்னிலே தண்ணீரை ஏந்திடு
எந்தலை வன்தாள் எனைபுகும் வித்தையை
எந்தளை யுமின்றி உரைத்திடு வான்பிறையே.

5-வெண்பொடி பூசலான் தந்நீல கண்டமும்
தண்கருணை தன்னருள் தயாளன் பரமனின்
வெண்ணிற மேனியு முடனுறை தையலும்
வெண்பனி மாமலை சேர்வழிசொல் வான்பிறையே.

6-கண்தான் கொடுத்தே பரந்தாமன் போற்றிடும்
கண்ணன் தினமுமே கண்ணாய் போற்றிடும்
கண்ணதை கொடுத்த கண்ணப்பன் போற்றிடும்
எண்குணத் தனையான் அடைமுறைசொல் வான்பிறையே.

7- செந்தழல் போலொரு செம்மையை கண்டிட
வெந்தழல் கொண்டவன் வெய்யோனாய் நின்றிட
அந்தழல் தன்னையே அடியவன் சேர்ந்திட
வந்திங்கு ரைப்பாய் முடியுறை வான்பிறையே

8- சங்கத் தமிழ்கண்ட சங்கரன் தன்னையே
அங்கம் பொடிபூசும் அரணடி போற்றியே
செங்க மலர்பாதம் சென்றுயான் சேரவே
வங்க கடலேறி வழிசொல்வாய் வான்பிறையே.

9- முத்தம் முதலானோன் முந்தைப் பெருளானோன்
     நித்தம் தொழுதேத்தி நிமலனெனை காத்திட்ட
     சித்தன் சிவனடிக்கே சிவத்தொண்டு செய்தாற்றி
   அத்தன் அவனை அடைவழிசொல் வான்பிறையே.

10- அன்றைப் படைத்திட்டு அங்கங் காத்திட
      நன்றென் பொலிசையினை நல்வழி நீக்கிட
       தென்றல் சுகமனைதாய் தென்னவன் தாள்சேர
        நன்காய் பதிலுரைப்பாய் நல்வழியை வான்பிறையே
     

ஞாழல்  - கொன்றை மலர்
ஞாதல் - காண்பது / காணுதல்
பொலிசை - கடன்
பவ்வம் - கடல்
எவ்வம் - துயர்
அவ்வம் - ஆசை
மௌவ்வம்- மல்லிகை



This post first appeared on Writer Pavithran Kalaiselvan, please read the originial post: here

Share the post

திருத்தாள்சேர் பதிகம்

×

Subscribe to Writer Pavithran Kalaiselvan

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×