நீருக்காக நெருப்பாய் எரிகிறது தமிழ் மண்! காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி மொத்தத் தமிழ்நாடும் பிடரி சிலிர்த்து நிற்கிறது! தமிழன் எனச் சொல்லிக் கொள்ளப் பெருமை தரும் இன்னொரு வரலாற்றுத் தறுவாய் இது!
ஆனால் இதே நேரத்தில், போராட்டம் எனும் பெயரில் நம்மைத் துணுக்குறச் செய்யும் சில நிகழ்வுகளும் நடக்காமல் இல்லை.
காவிரிக்காகச் சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம், தீக்குளிப்பு போன்ற செய்திகளைப் பார்க்கும்பொழுது, நடக்கும் போராட்டங்கள் சரியான திசையில்தான் செல்கின்றனவா எனும் ஐயம் எழாமல் இல்லை.
கடந்த 2016ஆம் ஆண்டுக் காவிரிப் பிரச்சினையின்பொழுது கருநாடகத்தில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்துச் சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சிப் பேரணியில் அக்கட்சி மாணவர் அணி மேலாளர் விக்னேஷ் தீக்குளித்து உயிரிழந்தார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, ஈரோடு மாவட்டம், சித்தோட்டைச் சேர்ந்த பொம்மை விற்பனையாளர் தருமலிங்கம் என்பவர் கடந்த வாரத்தில் (12.04.2018) தீக்குளித்து இறந்தார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி அதற்கு அடுத்த நாள் (13.04.2018) விருதுநகரில் சரவண சுரேஷ் என்பவரும் தீக்குளித்தார்.
இவர்கள் தவிர, புகழ் பெற்ற சமூக ஆர்வலரான டிராபிக் இராமசாமி அவர்கள் முதற்கொண்டு பலரும் இதே கோரிக்கைக்காக ஆங்காங்கே சாகும் வரை உண்ணாநிலைப் போராட்டம் தொடங்கியிருக்கிறார்கள்.
கொண்ட கொள்கைக்காக உயிரையே அளிப்பது என்பது சிரமேற்கொண்டு வணங்க வேண்டிய ஈகைதான் (தியாகம்தான்); அதில் அணுவளவும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ஈகையர்களே! இப்படி உயிரைத் தருவதால் காவிரி கிடைத்து விடும் என உண்மையிலேயே நீங்கள் நம்புகிறீர்களா? அப்படிக் கிடைத்து விடும் என்றால் சொல்லுங்கள், நீங்கள் மட்டுமில்லை இன்னும் ஆயிரம் ஆயிரம் பேர் வரிசை கட்டி வரக் காத்திருக்கிறோம் காவிரிக்காகவும் நம் வேளாண் பெருமக்களுக்காகவும் உயிரைக் கொடுக்க. ஆனால், தமிழர்கள் நாம் எத்தனை இலட்சம் பேர் உயிர் விட்டாலும் அதையெல்லாம் ஒரு செய்தியாகக் கூட யாரும் இன்று மதிக்க மாட்டார்கள் என்பதே வலிக்க வைக்கும் உண்மை.
“உணவு இல்லாமல் தமிழர்கள் செத்தாலும் கவலையில்லை, நாட்டுக்கு எரிபொருள் கிடைப்பதுதான் முக்கியம்” எனச் சொல்லாமல் சொல்லும் விதமாகத்தான் இவ்வளவு எதிர்ப்பையும் மீறிச் சாணவளித் திட்டம் (மீத்தேன் திட்டம்) கொண்டு வருகிறார்கள்!
“குடிக்கத் தண்ணீர் கூட இல்லாமல் தமிழினம் செத்து மடிந்தாலும் சரி, கருநாடகத்தின் நாற்காலியை விட்டுக் கொடுக்க முடியாது” எனக் குறிப்பால் உணர்த்தும் வகையில்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தவிர்த்து வருகிறார்கள்!
அவ்வளவு ஏன், ஸ்டெர்லைட் வழக்கில், தமிழ் மக்கள் உயிரை விடத் தாமிரமே இந்நாட்டுக்குத் தேவை எனத் தீர்ப்பே எழுதிய வரலாறு இங்குண்டு!
இப்படி, தமிழர் இனமே அழிந்தாலும் தங்கள் பேரழிப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலேயே குறியாக இருப்பவர்கள், நம்மில் சிலர் தீக்குளிப்பதாலோ, உண்ணாநிலை இருந்து உயிரை விடுவதாலோ மட்டும் மனமிரங்கித் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டு விடுவார்கள் என நீங்கள் எப்படி நம்புகிறீர்கள் என்பது எனக்கு இம்மியளவும் புரியவில்லை போராளிகளே!
அதற்காக நான் உங்களை வன்முறையில் ஈடுபடச் சொல்லவில்லை; அறவழிப் போராட்டங்களைக் கைவிட்டுப் போர்க்கருவிகளை நாடச் சொல்லவில்லை. அப்படிச் சொன்னால் அதை விடப் பித்துக்குளித்தனம் வேறு ஏதும் இருக்க முடியாது. ஏனெனக் கேட்டால்...
Related Articles
This post first appeared on அகச௠சிவபà¯à®ªà¯à®¤à¯ தமி, please read the originial post: here