Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

யாழ்.பல்கலை மாணவர்களை சுட்டதில் தவறு இல்லை பொலிஸ்மா அதிபரின் புது விளக்கம்!

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகள் தரப்பில் தவறு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் இன்று இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை உடனடியாக அறிவிக்காமல் இருந்தமை குறித்த அதிகாரிகளின் தவறு என்றும், இது ஒரு விதி மீறல் செயற்பாடு என்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எண்ணி தான் மிகுந்த மன வருத்தம் அடைவதாகவும் பொலிஸ்மா அதிபர் கூறியுள்ளார்.

குறித்த மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு பொலிஸாருக்கு எந்த அதிகாரமும் இல்லை என பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும் இது போன்ற சந்தர்ப்பங்களில் தேவையான அதிகாரத்தை பிரயோகிப்பதற்கு பொலிஸாருக்கு அனுமதி இருப்பதாகவும் அவர் கூறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் கூறிய அந்த கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாக இருக்க கூடும் என்றும் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர குறிப்பிட்டுள்ளார்.


This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

யாழ்.பல்கலை மாணவர்களை சுட்டதில் தவறு இல்லை பொலிஸ்மா அதிபரின் புது விளக்கம்!

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×