Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

மாணவர்கள் பயணம் செய்தது 1000 சீ.சீ ரக மோட்டார் சைக்கிளில்..?

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸ் உத்தரவினை மீறி பயணம் செய்த மோட்டார் சைக்கிள் அதிவேக மோட்டார் சைக்கிள் என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

மோட்டார் சைக்கிளை நிறுத்தாது சென்ற காரணத்தினால் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் ஒரு மாணவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்ததுடன் மற்றைய மாணவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த மாணவர்கள் இருவரும் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் 1000 சீ.சீ ரக அதி வேக மோட்டார் சைக்கிள் என சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த அதி வேக மோட்டார் சைக்கிளுக்கு வடக்கு மோட்டார் போக்குவரத்து அதிகாரிகள் அனுமதி வழங்கியமை சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் பிரிட்டன் புலம்பெயர் தமிழர்களினால் இந்த ரக மோட்டார் சைக்கிள்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

சுன்னாம் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களும் 1000 சீசீ ரக மோட்டார் சைக்கிளில் சென்றே தாக்கதல் நடத்தியதாக அந்தப் பத்திரிகையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் இந்த சம்பவம் இடம்பெற்றதன் பின்னர் அமைச்சர் மனோ கணேசன் செய்தியாளர் சந்திப்பு ஒன்றின் மாணவர்கள் பயணம் செய்த மோட்டார் சைக்கிள் 125 சீ.சீ ரகம் என கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

copy to Tamilwin-


This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

மாணவர்கள் பயணம் செய்தது 1000 சீ.சீ ரக மோட்டார் சைக்கிளில்..?

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×