Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

எழுக தமிழ் பேரணி! சிங்கள பத்திரிகையொன்றுக்கு மனோ கணேசன் பதில்

எழுக தமிழ் பேரணிக்கு பதிலாக இலங்கையரே எழுக என்ற அடிப்படையில் பேரணி நடத்தப்பட வேண்டுமென தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

சிங்கள பத்திரிகையொன்று எழுக தமிழ் பேரணி குறித்து எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

சிங்களவரே எழுக, தமிழரே எழுக மற்றும் முஸ்லிம்களே எழுக என்னும் தொனிப் பொருட்களில் பேரணிகள் நடத்தப்படுவதனை விடவும், இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டை அபிவிருத்திக்கு பாதைக்கு இட்டுச்செல்ல வேண்டிய யுகமொன்ற உருவாகியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் எழுக தமிழ் பேரணி நடத்தப்படவுள்ளது.

இந்தப் பேரணி நடத்தப்படுவதற்கு விசேட விதமான எதிர்ப்போ அல்லது ஆதரவோ நான் வழங்கப் போவதில்லை.

எழுக தமிழா அல்லது இலங்கையரே எழுக என்பதனை வரலாறு நிரூபிக்கும் என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

   


This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

எழுக தமிழ் பேரணி! சிங்கள பத்திரிகையொன்றுக்கு மனோ கணேசன் பதில்

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×