Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

தமிழர்களையும் முஸ்லீம்களையும் சிங்களவர்களை கொண்டு தாக்க வேண்டும்!

மட்டக்களப்பு நகருக்குள் எம்மை நுழைய விடாது தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முஸ்லிம் அடிப்படைவாதிகளும் இணைந்து செயற்பட்டதாக பொதுபலசேனா குற்றம் சுமத்தியுள்ளது.

எனவே, அந்த தரப்பினர் மீது சிங்களவர்களை கொண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட வேண்டும் என பொது பாலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசாரதேரர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கையில் யுத்தம் ஒன்றை ஏற்படுத்தி, மனித படுகொலைகளை புரிந்த விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை வடக்கு மற்றும் கிழக்கில் மாவீரர் தினத்தன்று கொண்டாடினார்கள்.

அதற்கு இந்த அரசாங்கம் அனுமதியளித்திருந்தது. அத்துடன், குறித்த செயற்பாட்டிற்கு எதிராக தடையுத்தரவை பிறப்பிக்குமாறு புலனாய்வு பிரிவினர் கோரிக்கை விடுக்கவில்லை.

எனினும், சிங்கள அமைப்புகள் எந்த முறையில் கூட்டம் நடத்தினாலும் புலனாய்வு பிரிவினர் பாதுகாப்பை காரணம் காட்டி தடை உத்தரவு கோரி நிற்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, நாட்டில் சிங்களவர்கள் தொடர்ந்தும் சுதந்திரமாக செயற்பட முடியாதநிலை இருந்துவருகின்றது. எனவே இதனை தொடர்ந்தும் பொருத்துக்கொள்ள போவதில்லை என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


This post first appeared on HowLanka, please read the originial post: here

Share the post

தமிழர்களையும் முஸ்லீம்களையும் சிங்களவர்களை கொண்டு தாக்க வேண்டும்!

×

Subscribe to Howlanka

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×