சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி இசட் போல்டு 3 மற்றும் கேலக்ஸி இசட் ப்ளிப் 3 மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத வாக்கில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிமுக நிகழ்வு ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
Related Articles
இந்த நிலையில், இரண்டு புதிய சாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களும் ஆகஸ்ட் 27 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. மேலும் கேலக்ஸி இசட் போல்டு 3 அன்டர்-டிஸ்ப்ளே கேமரா கொண்ட முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் என்ற பெருமையை பெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
இதே நிகழ்வில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி வாட்ச் 4 சீரிசை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. முன்னதாக கேலக்ஸி S21 FE மாடலையும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் அறிமுகம் செய்ய சாம்சங் திட்டமிட்டு பின் அதனை மாற்றி இருப்பதாக கொரியா செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
The post இணையத்தில் லீக் ஆன கேலக்ஸி இசட் போல்டு 3 விற்பனை விவரம் appeared first on Tamiltech.