Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

சாமுத்ரிகா லட்சணம் - பெண்

பெண்களில் நான்கு வகையினர் இருப்பதாகவும், அவர்களை அத்தினி, சங்கினி, சித்தினி, பத்மினி என அழைக்கிறார் அகத்தியர்.இந்த வகை பெண்களை பின் வருமாறு இனம் காணலாம் என்கிறார்.

அத்தினி

பெண்களில் இவர்களை உயர்ந்த வகையினர் என்கிறார்.வெளிர்மையான நிறத்தை உடையவர்களாம். அழகியகண்களும், மென்மையான தலை முடியையும் கொண்டவர்களாக இருப்பார்களாம்.

சங்கினி

நடுத்தர உயரமும் , மஞ்சள் நிறமும் உடைய இந்த வகை பெண்களுக்கு சங்கு போன்ற கழுத்து அமைந்திருக்குமாம்.அழகான மற்றும் அளவான உடலமைப்பைக் கொண்டவர்களாக இருப்பார்களாம் சங்கினி வகைப் பெண்கள்.

சித்தினி

மெலிவும் இல்லாமல் அதிக பருமனும் இல்லாமல் நடுத்தர உடலமைப்பைக் கொண்ட இந்த வகைப் பெண்டிர் செழுமை நிறமாக இருப்பார்களாம். மேலும் இவர்கள் மேனி கதகதப்பாக இருக்குமாம்.

பத்மினி

இந்த வகைப் பெண்கள் தடித்து உயர்ந்த உதடுகளையும், செம்பட்டை நிற கூந்தலையும் கொண்டிருப்பார்களாம். இவர்கள் கரிய நிறம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்கிறார் அகத்தியர்.


ஆண்களைப் போலவே பெண்களுக்கும் தலைமுடி, நெற்றி, கண், புருவம், கண்கள், மூக்கு, வாய், உதடு, பற்கள், நாக்கு, காது, மோவாய், முகம், கழுத்து, அக்குள், காரை எலும்பு, மார்பகங்கள், தொப்புள், முதுகு, கைகள், விரல்கள், உள்ளங்கைகள், நகங்கள், இடுப்பும் வயிறும், தொடை, பெண்குறி ஆகியவைகளின் அமைப்பினை வைத்து சித்தர்கள் பலன் கூறியிருக்கின்றனர்.



உடல்

  • பெண்களின் உடலானது பூவினைப் போன்று மென்மையாக இருக்குமானால் அவள் ஆரோக்கியமானவர்களாக இருப்பார்களாம். எல்லா வளங்களுட்ம் நிறைந்திருக்குமாம்.இங்கே வளங்கள் என்பது உடல் நலமாக இருக்கக் கூடும்.
  • பெண்ணின் உடலில் அதிகமான பகுதிகள் சிவந்து காணப்பட்டால் அவள் உலக மக்கள் வணங்கும் அளவு சிறப்பையும் மேன்மையையும் அடைவாளாம்.
  • பெண்களின் உடம்பில் கற்பூர வாசனை, சந்தன வாசனை, எலுமிச்சை வாசனை, தாமரைப்பூ வாசனை உடம்பில் வருமானால் அவளுடன் மகாலட்சுமி உடன் வாசம் செய்வாராம்.
  • பெண்ணின் முகம் தங்கத்தைப் போல பொலிந்து சிவந்து முகத்தினை உடையவளிடம் எப்போதும் தர்ம சிந்தை மேலோங்கி இருக்குமாம்.
  • பூரண சந்திரனைப் போல் முகவசீகரமும், சூரியன் உதிக்கும் காலத்தில் உள்ளதைப் போல பிரகாசமான தேஜஸும், பெரிய கண்களையும் உடையவள் எப்போதும் மகிழ்வாக இருப்பதுடன் அவளை சூழ இருப்பவர்களையும் மகிழ்வுடன் வைத்திருப்பாளாம்.

புருவம்

  • புருவங்கள் குறுகலாகவும், ஒடுக்கமாயும், ஒரே சீராகவும் இருந்தால் அவர்கள் நன்னடைத்தை உடையவர்களாவும், நேர்மை மிக்கவர்களாவும், நல்லொழுக்கம் மிக்கவர்களாவும் இருப்பார்களாம்.
  • வளைந்த கண் புருவங்கள் மூக்கின் அடிப்பாகம் வரை நெருங்காமல் இருந்தால் அவள் சிறந்த திறமசாலியாகவும் நுண்ணிய அறிவுள்ளவளாகவும் இருப்பாளாம்.இவர்களின் கன்ன கதுப்பு மலர்களைப் போல பளபளப்புடன் இருக்குமாம்.

நெற்றி

  • ஒரு பெண்ணின் நெற்றியில் ஐந்து ரேகைகள் இருந்தால் அவள் நீண்ட ஆயுளைக் கொண்டிருப்பதுடன், சிறப்பான சிந்தனை வளமும் கொண்டவளாக இருப்பாளாம்.

உதடுகள்

  • பொதுவில் உதடுகள் சிவப்பு நிறமாக இருப்பது மிகவும் நன்மை பயக்குமாம்.என்ன மாதிரி நன்மைகள் என்பது பற்றி தகவல்கள் இல்லை.தேடிப் பார்க்க வேண்டும்.
  • உருண்டை வடிவமாகவம் சதைப்பிடிப்புடன் கூடிய உதடுகளைக் கொண்ட பெண்களின் வாழுவு சிறப்பாக அமையுமாம்.
  • ஒரு மங்கையின் மேல்உதடு பெரிதாயிருப்பின் அவர்கள் முன் கோபக்காரர்களாகவும், சண்டைக் கோழிகளாகவும் இருப்பார்களாம்.
  • உதடுகள் சிவந்து தாமரை இதழ் போல இருக்கும் பெண்கள் அவர்கள் சிறந்த அறிவாளியாகவும், பிறரை வழிநடத்துவதில் கைதேர்ந்தவர்களாகவும் இருப்பார்களாம்.

கண்கள்

  • கண்கள் பளிச்சென அளவாக உருண்டு திரண்டிருந்தால் அத்தகைய பெண்கள் எல்லா வளமும் பெற்று வாழ்வார்களாம்.

  • கலை மானின் கண்களைப் போல மருளக் கூடிய கண்களை உடையவர்கள், தங்கள் வாழ்க்கைத் துனைக்கு ஏற்ற குணவதியாகவும், நேர்மறையான சிந்தனை போக்கினை கொண்டவராகவும் இருப்பார்களாம்.இத்தகையவர்கள் கணவனை தங்கள் கட்டுப் பாட்டில் வைத்திருப்பார்களாம்.

  • மீனைப் போல கண்களை உடைய பெண்கள் சுதந்திரமான எண்ணப் போக்கினை கொண்டவர்களாக இருப்பார்களாம்.

வாய்

  • நாக்கு நுனி கூராக இருக்கும் பெண்கள் வாக்கு சாதுர்யத்துடன், பிறரை கவரும் வகையில் பேசுபவர்களாக இருப்பார்களாம்.

  • நாக்கும் வாயும் கறுத்திருந்தால் புகுந்த வீட்டில் தகராறு செய்பவளாயும், குடும்பத்தை பிரித்து வைப்பவராகவும் இருப்பாளாம்.

  • குவிந்த அழகிய வாயை உடைய பெண்கள் மிகவும் மென்மையாக பேசுபவர்களாகவும் , அதிகம் கோபப்படாதவர்களாகவும் இருப்பார்களாம்.

காதுகள்

  • அளவில் சமமான, மிருதுவான காதுகளை உடைய பெண்கள் அதிக புகழை அடைவார்களாம்.

  • சரியான அளவில் மேடு பள்ளங்களுடன் நேர்த்தியான காதுகளை கொண்ட பெண்கள் பிறரின் வணக்கத்துக்கு உரியவர்களாகவும், தான தர்மங்களில் ஈடுபாடுள்ளவர்களாகவும் இருப்பார்களாம்.

  • விசாலமானதாகவும், முகத்திற்கு பொருத்தமில்லாத பெரிய காதுகளைக் கொண்ட பெண்கள் சோம்பேறித் தனம் மிகுந்தவர்களாக இருப்பார்களாம்.

  • முகத்துக்கு பொருத்தமான காதுகளை உடைய பெண்கள் அனைவரையும் கவாந்திழுக்கும் தன்மை உடையவர்களாக இருப்பார்களாம்.

  • கரடு முரடான காதுகளை கொண்ட பெண்கள் துன்பத்தினையே அனுபவிப்பார்களாம்.

கூந்தல்

  • சுருள் சுருளான அழகிய நீளமான கூந்தலை கொண்ட பெண்கள் இருக்கும் இடத்தில் செல்வம் தங்குமாம்.

  • மிருதுவான கருத்த நிற கூந்தலைக் கொண்ட பெண்கள் சிறப்பானவர்களாக இருப்பார்களாம்.


  • கரடுமுரடான கூந்தலையும், வட்டவடிவமான கண்களையும் உடையவள் எவளோ அவள் விரைவில் கணவனை இழப்பாளாம்.

  • கட்டையான தலைமுடிகளை கொண்ட பெண்கள் அதிக ஆடம்பரப் பிரியர்களாக இருப்பார்களாம்.

பற்கள்

  • எண்ணெய் பசையுள்ள பற்களையுடையவள் சாப்பாட்டுப் பிரியையாக இருப்பாளாம்.

கழுத்து

  • குட்டையான கழுத்தடையுடைய பெண்கள் துன்பத்தையே அனுபவிப்பார்களாம்.
நவீன அறிவியலில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொள்வது எளிதான காரியம்.ஆனால் பல நூறு வருடங்களுக்கு முன்னர் ந்மது முன்னோர்கள் கருவுற்ற பெண்ணின் தேக லக்‌ஷணங்களை வைத்தே கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை எளிதாக கண்டறிந்திருக்கின்றனர்.

கருவில் இருப்பது ஆண் குழந்தையாக இருந்தால்...

  • கருத்தரித்த பெண்ணுக்கு வலப்பக்க மார்பகமானது இடதுபக்க மார்பகத்தை விட பெரியதாகவும் சற்று பாரமானது போலவும் தோன்றுமாம்.
  • வலது பக்க மார்பகத்தை கசக்கினால் அதிலிருந்து வெண்மையான திரவம் வெளியேறுமாம்.
  • வயிற்றினுள் குழந்தையானது வலதுபக்கமாகச் சாய்ந்திருப்பது போல தோன்றுமாம்.
  • ஒவ்வொரு தவவையும் சிறுநீர் கழிக்கும் போது சிறுநீரானது ஒருவித மாற்றத்துடன் இருக்குமாம்.
  • இத்தகைய பெண்கல் உட்கார்ந்து எழுந்திருக்கும் எழுந்திருக்கும் போதும் வலதுகையையே உன்றிக் கொள்வார்களாம்

இத்தகைய அறிகுறிகள் இருந்தால் கருவில் இருப்பது ஆண் குழந்தை என்று அறியலாமாம்.


கருவில் இருப்பது பெண் குழந்தையாக இருந்தால்...

  • கருத்தரித்த பெண்ணுக்கு இடதுபக்க மார்பகமானது வலப்பக்க மார்பகத்தை விட பெரியதாகவும் சற்று பாரமானது போலவும் தோன்றுமாம்.
  • உட்கார்ந்து எழுந்திருக்கும் போது இடதுகையை உன்றிக் கொள்வார்களாம்.
  • முகத்தின் நிறத்தில் சிறிய மாற்றம் தென்படுமாம்.
  • அதிக சோம்பல் ஏற்படுவதுடன், சிற்றுண்டிகளில் அதிகம் பிரியம் ஏற்படுமாம்.

இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் கருவில் இருப்பது பெண் குழந்தை என்று அறியலாமாம்.


பெண்கள் கருவுறுதலில் இரண்டு வகையிருப்பதாக சித்தர் பெருமக்கள் கூறுகின்றனர். அவை மெய்கர்பம் மற்றும் பொய்கர்பம் ஆகும். மெய்கர்ப்பம் பற்றி விளக்க தேவையில்லை என்பதால், பொய்கர்பம் என்னவென பார்ப்போம்.

சில பெண்களுகு மாதாமாதம் வெளியேற வேண்டிய சூதமானது அதிகமான வாய்வு மற்றும் பல்வேறு காரணிகளால் வெளியேறாமல் கருவரையின் உட்புற சுவர்களில் படிந்து இறுகி கட்டி போலாகிவிடுமாம். இவ்வாறு தொடர்ந்து சூதனம் வெளியேறாது போனால் அவை மேலும் படிந்து பெரியதாகி விடுமாம்.இந்த கட்டியானது கருவறைக்குள் அசைந்து இடம் மாறுமாம். சில காலம் கழித்து பிரசவ வேதனை போல வலியேற்பட்டு வெளியேறிடுமாம். இதனை ஆரம்பத்தில் கண்டறிந்து உரிய மருந்துகளை உட் கொண்டால், இந்த கட்டிகள் சிதைந்து வெளியேறும் என்கின்றனர். அவ்வாறு கவனிக்கத் தவறினால் நாளடைவில் பல கோளாறுகளுக்கு வழிவகுக்கும் என்கின்றனர்.

இந்த இரண்டு கர்பங்களுக்கு இடையேயான வித்தியாசஙக்ளை கண்டறியும் முறைகளை சித்தர்கள் பின் வருமாறு வரையறுத்துக் கூறுகின்றனர்.
  • மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் இரண்டு மண்டல காலம்(மூன்று மாதம்) எவ்வித அசைவோ, சலனமோ இருக்காதாம்.
  • பொய் கர்ப்பம் உள்ள பெண்களுக்கு ஆரம்பம் முதலே அசைவுகளும், சலனங்களும் இருக்குமாம்.
  • மெய்யான கர்ப்பத்தில் பெண்ணின் வயிறு படிப்படியா பெரிதாகுமாம்.
  • பொய்யான கர்ப்பம் உள்ள பெண்களுக்கு 25 முதல் 40 நாள்களுக்குள் வயிறு பெரியதாகி விடுமாம்.
  • மெய்யான கர்ப்பம் தரித்த பெண்ணின் வயிற்றில் விரலை வைத்து அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளம் மெது மெதுவாக மறையுமாம்.
  • பொய்யான கர்ப்பம் உள்ள பெண்ணின் வயிற்றில் விரலால் அழுத்தி எடுத்தால் ஏற்படும் பள்ளமானது சடுதியில் மறையுமாம்.
  • மெய்யான கர்ப்பமானது பதினொரு மாதங்களுக்கு மேல் நீடிக்காதாம்.
  • பொய்யான கர்ப்பம் பல வருடங்கள் கூட நீடிக்குமாம்.

மருத்துவ அறிவியல் வளர்ந்து விட்ட இன்றைய சூழலில் இவையெல்லாம் பெரிதான தகவல்கள் இல்லைதான், ஆனால் எவ்வித அறிவியல் முன்னேற்றமோ, வசதியோ இல்லாத ஒரு காலகட்டத்தில் நமது மூதாதை ஒருவர் இதையெல்லாம் தன் நூல்களில் விரிவாக பாடி வைத்து விட்டு சென்றிருப்பது அன்றைக்கே மருத்துவ துறையில் நாம் எந்த அளவிற்கு உச்சத்தில் இருந்திருக்கிறோம் என்ப்தை பறை சாற்றுகிறதல்லவா...

இம்மாதிரி இன்னமும் எத்தனையோ பல அரிய தகவல்கள் ஆவணப் படுத்தப் படாமல் அழிந்து கொண்டிருக்கின்றன. அவற்றை நம்மால் இயன்ற வரையில் தேடியெடுத்து பாதுகாத்து,மேம்படுத்தி இனி வரும் தலைமுறைகளுக்கு கொடுத்திட வேண்டும்.

மேலும் சில தனித் தகவல்களை பகிர்ந்து கொள்கிறேன்.

  • ஒரு கயிறு அல்லது நூலை எடுத்து ஒரு பெண்ணின் ஐந்து விரல்களின் நீளத்தினை அளந்து, அந்தக் கயிற்றை முழங்கையில் இருந்து நடுவிரல் வரை அளந்து பார்க்க வேண்டும். அந்த கயிறு/நூல் துல்லியமாய் அந்த பெண்ணின் நடுவிரல் நுனியில் வந்து முடிவடைந்தால், அவள் கணவனுடன் பல வருடங்களுக்கு மேல் இணைந்து மகிழ்வுடன் வாழ்வாளாம். அவளது கணவன் உயர் பதவி வகிப்பானாக இருப்பான் என்கின்றனர்.
  • ஒரு வேளை அந்த நூலானது நடுவிரலில் நுனியை விட ஒரு கோடு தாழ்ந்து நிற்குமாயின்,அத்தகைய பெண் அறிவிற் சிறந்த, நீண்ட ஆயுளுடன் கூடிய பிள்ளைகளை ஈன்றெடுப்பாளாம்.
  • பெண்ணின் கைவிரல்கள் கூர்மையாக இருந்தால் அவள் ஓவியம் , நாட்டியம், இசை போன்ற கலைகள் ஏதேனும் ஒன்றில் சிறப்பான தேர்ச்சி உள்ளவளாக இருப்பாளாம்.
  • பெண்ணின் விரல்கள் பார்த்த மாத்திரத்தில் தாமரை மோட்டுக்கள் போல் இருந்தால் அத்தகைய பெண் மிகுந்த புத்திசாலியாகவும், தன் கணவனுக்கு சிறந்த ஆலோசனைகள் வழங்குவதில் மந்திரி போலவும் இருப்பாளாம்.
  • பெண்ணின் கையில் இருக்கின்ற ரேகைகள் சிவப்பு நிறமாக இருந்தால் உடல் நலம் மிக்கவர்களாகவும், அதே நேரத்தில் ரேகைகள் கருமையாக இருந்தால் நோய்க்கான அறிகுறி என்றும் அறிந்து கொள்ளவேண்டுமாம்.
  • பெண்ணின் மணிக்கட்டுகள் செம்மையாய் அமையப் பெற்றிருந்தால் அத்தகைய பெண்ணால் கணவனுக்கு செல்வம் பெருகுமாம்.
  • பெண்ணின் கைகள் தாமரை மலரைப் போலிருந்தால் மிகவும் நல்ல குணங்களைக் கொண்டவளாக இருப்பாளாம்.
  • பெண்ணின் உள்ளங்கைகள் அதிகக் குழியில்லாமலும் அதிக உன்னதமில்லாமலும் இருப்பது நன்மை அளிக்காதாம்.
  • உள்ளங்கை வரிகள் அல்லது உள்ளங்கையில் அதிக ரேகைகளையுடைய பெண்கள் விதவையாகாமல் நலத்துடன் வாழ்வார்களாம்.

  • இயல்பைக் காட்டிலும் குட்டையாகவோ,அல்லது அளவுக்கு அதிகமான உயரமாகவோ இருக்கும் பெண்கள் நீதிக்குப் புறம்பான காரியங்களை செய்யத் தயங்காதவர்களாக இருப்பார்களாம்.
  • உருண்டையான வடிவமும்,செழுமையான முடிகள் இல்லாத இடுப்பையுடைய பெண்கள் மிகுந்த அழகிகளாக இருப்பார்களாம்.
  • முடியில்லாத சன்னான கூர்மையுள்ள மார்பகங்களை உடைய பெண் எல்லாப் பாக்கியங்களும் பெற்றவளாக இருப்பாளாம்.
  • சாய்வாய் வக்கிரமாய் பார்க்கும் தன்மை கொண்ட பெண் விபச்சாரியாக இருப்பாளாம்.
  • யானையின் துதிக்கை போன்ற அமைப்புடைய தொடையும், அத்தகைய தொடைகள் சமனாகவும் இருந்தால் அவள் செல்வச்சீமாட்டியாக இருப்பாளாம்.
  • நேர்த்தியான உடல் அங்கங்களையும்,தாமரை மொட்டுப்போல குவிந்த மார்பகங்களாஇயும்,பூரணமான தொடைகளைக் கொண்டு பெண்யானைப் போல நடையும் கொண்ட பெண் அழகிய கண்களுடன் சிறந்த அதிர்ஷ்டசாலியாக இருப்பார்களாம். எந்த ஆடவரும் இவர்கள் அழகில் மயங்கிவிடுவார்களாம்.
  • மார்பகங்கள் வற்றி இருந்தாலும், ஒன்றுக்கொன்று பொருத்தமில்லாமல் இருந்தால் அத்தகைய பெண் வறுமையால் வாடுவாளாம்.
  • ஒரு பெண்னின் வயிறானது புள்ளிமானுடைய வயிறு போலிருந்தால் அவள் புமியை ஆளும் சக்தி கொண்ட பிள்ளையைப் ஈன்றெடுப்பாளாம்.
  • குயிலின் ஓசையை ஒத்த குரலில் பேசிச் சிரிப்பவர்கள் அதிக அதிர்ஷ்டம் உடையவர்களாம்.
  • பளபளக்கும் எண்ணெய்ப் பசையையுடைய பாதங்களையுடைய பெண்களிடம் நில புல்கன்கள், வாகனங்கள் போன்ற சொத்துக்கள் எப்போதும் நிறைந்திருக்குமாம்.
  • பாதங்களை திடும் திடும் என்று வைத்து நடந்தாலும், காலடிகள் நீண்டிருந்தாலும் கெடுதல் என்கின்றனர்.
  • பாதத்தின் விரல் நகங்கள் சிவந்து கண்ணாடி போன்றிருந்தால் நன்மை என்றும்,நகம் பிளந்து வெளிறிப் போயிருந்தால் துக்கம்தான் விளையுமாம்.
  • குளிர்ச்சியாகவும் சமமாகவும் உள்ள உள்ளங்கால்களையும், குவிந்த உள்ளங்கைகளைக் கொண்ட பெண் அரசியாவாளாம்.அவலை திருமணம் செய்கிறவன் பாக்கியவான் என்கின்றனர்.
  • தாமரை மொட்டை ஒத்த கணுக் கால்களும்,மிருதுவாகவும் வியர்வையில்லாத உள்ளங்கைகளும் அமையப்பெற்றிருந்தல் அவள் கல்வியறிவிலும், செல்வத்திலும் சிறந்து விளங்குவாளாம்.


This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

சாமுத்ரிகா லட்சணம் - பெண்

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×