Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கைரேகை சாஸ்திர ரேகைகள்.





1: 
ஆயுள் ரேகை
2: 
புத்தி ரேகை
3: 
இதய ரேகை
4:
சுக்கிரனின் வட்டப்பாதை
5
சூரிய ரேகை
6: 
புதன் ரேகை
7: 
விதி ரேகை
ஆண்களுக்கு வலக்கை ரேகையையும் பெண்களுக்கு இடக்கை ரேகையையும் பார்க்க வேண்டும் என கைரேகை நிபுணர்கள் கூறி வருகின்றனர் என்பது யாவரும் அறிந்ததே! ஆனால் ஆய்வின்படிஇரண்டு கைகளின் ரேகையையும் பார்த்துத்தான் துல்லியமாக பதில் கூற முடியும். ஆண்களுக்கு இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும்,வலக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். அதுபோல் பெண்களுக்கு வலக் கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு முன்னால் நடந்த பலன்களையும்,இடக்கை ரேகையையைப் பார்த்து 40 வயதிற்கு பிறகு நடக்கப் போகிற பலன்களையும் கூற வேண்டும். ஓர் ஆடவரின் இடக்கையில் உள்ள ரேகைகளும்மேடுகளும் பலவீனமாக இருக்கஅவரது வலக்கையில் உள்ள ரேகைகளும்மேடுகளும் பலமாக இருந்தால்அவர் 40 வயது வரைபலவிதமான கஷ்டங்களை அனுபவித்துஅதற்கு பிறகு படிப்படியாக தனது வாழ்வில் போராடி வெற்றியடைந்துநல்ல நிலைமையை அடைவார் எனக் கூற வேண்டும். இரண்டு கைகளில் உள்ள ரேகைகளும்மேடுகளும் பலமாக இருந்தால் அந்த நபர் வாழ்நாள் முழுவதும் நல்ல சந்தோஷமான வாழ்க்கையைப் பெறுவார். ஆண்களுக்கு வலக் கை ரேகை சிறப்பாக இருக்க,இடக்கை ரேகை அம்சங்கள் பலவீனமாக இருந்தால் இவர்களுக்கு 2/3 பங்கு சுப பலனும் 1/3 பங்கு பாவ பலனும் உண்டாகும் என அறிய வேண்டும். இவ்வாறு பெண்களுக்கு இருந்தால் 1/3 பங்கு சுப பலனும் 2/3 பங்கு பாவ பலனும்உண்டாகும். அதாவது ஆண்களுக்கு வலக் கை ரேகையையும்பெண்களுக்கு இடக் கை ரேகையையும் அதிக சக்தி வாய்ந்தது.
கைரேகை மேடுகள்  - 
மேடுகளின் படி விரல்களையும் குருவிரல் (ஆட்காட்டி விரல்),சனி விரல் (நடு விரல்), சூரிய விரல்(மோதிர விரல்), புதன் விரல் (சுட்டு விரல்)என்கிறார்கள். ஆனால் கட்டை விரலை சுக்கிரவிரல் என்று கூறவில்லை. 



இனி ரேகைகளை பார்ப்போம்...

விதி ரேகை

உள்ளங்கையில் மணிக்கட்டு பகுதியில் இருந்து ஒரு ரேகை சனி மேட்டை நோக்கிச்  செல்லும். இதுவே விதி ரேகை அல்லது தொழில் ரேகை ஆகும். இது நமது உழைப்புக்குத் தகுந்த பலனைக் கொடுக்கக் கூடியது. சிலர் கைகளில் இந்த ரேகையே இருக்காது..! இவர்கள் எவ்வளவு தான் கஷ்டப்பட்டுப் பாடுபட்டாலும்பலன் கிடைக்காது. விதி ரேகை தெளிவாக அமைந்து வெட்டுக்குறிதீவு ஏதும் இல்லாது மணிக்கட்டிலிருந்து சனி மேடு வரை செல்வது நல்லது. இவர்கள் வாழ்நாள் முழுவதும் தொழில் விஷயத்தில் பிரச்சனை ஏதும் இல்லாது நிம்மதியாக வாழ்வர். விதி ரேகையுடன் ஆயுள்புத்திஇருதய ரேகைகளும் நன்றாக அமைந்திருந்தால்,இவர்களுக்கு நல்ல தேக ஆரோக்கியமும் புத்திசாலித்தனமும் நல்ல தொழில் விருத்தியும் ஏற்பட இடமுண்டு. இவர்களது எதிர்காலம் சந்தோசமாக அமையும்.

ஆயுள் ரேகை
முக்கியமானது..! சிலரது கைகளில் தடிமனாகவும்ஆழமாகவும்சிலரது கைகளில் லேசாகவும் மெல்லியதாகவும் பதிந்திருக்கும். தடிமனான ஆயுள் ரேகை மிருகபலத்தையும்மெல்லிய ஆயுள் ரேகை ஆத்ம பலத்தையும் குறிப்பிடும். தெளிவாகவும்மெல்லியதாகவும்நீளமாகவும் அமைந்த ஆயுள் ரேகைநல்ல தேக பலத்தையும்ஆரோக்கியத்தையும் கொடுக்கும். தடிமனான ஆயுள் ரேகை உடையோர் அடிக்கடி சிறுசிறு உடல் உபாதையால் சிரமப்படுவர். ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி எவ்வாறு அமைந்துள்ளது என்பதை ஆராய வேண்டும்ஆயுள் ரேகை சுக்கிர மேட்டைச் சுற்றி நன்கு விலகியிருந்தால்இவர்களது தேக ஆரோக்கியம் நன்றாகவும் சுக்கிரமேட்டைச் சுற்றி நெருங்கிக் காணப்பட்டால்நோய்  எதிர்ப்புச் சக்திகுறைவாகவும் இருக்கும். ஆயுள் ரேகை குரு மேட்டுப் பக்கம் சற்று உயர்ந்துகாணப்பட்டால்இவர்கள் தன்னடக்கம்கட்டுப்பாடுலட்சிய உணர்வு,உயர்வெண்ணம் கொண்டவர்களாக இருப்பர். ஆயுள்ரேகை கீழ் செவ்வாய்மேட்டிலிருந்து ஆரம்பித்திருந்தால்இவர்கள்உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவு
ம்அடக்கமில்லாதவர்களாகவும்சண்டை சச்சரவுகளில் ஈடுபடக்கூடியவர்களாகவும் இருப்பர். ஆயுள் ரேகையிலிருந்து மேல் நோக்கி எழும் ரேகைகள் சிறியதாக இருந்தால்இவர்கள் நல்ல உழைப்புஉற்சாகம்,அதிர்ஷ்டம் உடையவர்களாக இருப்பர்.
புத்தி ரேகை
குரு மேட்டின் அடிப்பகுதியில் ஆயுள் ரேகையை ஒட்டி ஆரம்பமாகி,உள்ளங்கையில் குறுக்காக செவ்வாய் மேடு அல்லது சந்திர மேட்டை நோக்கிச் செல்லும் ரேகை புத்தி ரேகை ஆகும். இது ஓரளவு அழுத்தமாகவும்,தெளிவாகவும் மெல்லியதாகவும் இருந்து தீவுபுள்ளிஉடைதல்போன்ற குறைபாடுகள் இல்லாது அமைந்தால் இவர்கள் புத்திசாலியாகவும் அதிக ஞாபக சக்தி உடையவர்களாகவும்,  நேர்மையாகவும் இருப்பர். புத்தி ரேகை நீளமாக அமைந்திருந்தால்இன்னும் விசேஷமான பலனைத் தரும். புத்தி ரேகை நமது மூளையின் அமைப்பையும்அது வேலை செய்யும் திறனையும்,நமது மனோநிலையையும் எடுத்துக் காட்டுகிறது..!
புத்திரேகையானது ஆயுள் ரேகையுடன் இணைந்து உற்பத்தியாகாமல் அல்லது ஆயுள் ரேகையுடன் ரேகை இணைப்பு எதுவுமில்லாமல் தனித்து ஆயுள்,இருதய ரேகைகளுக்கு மத்தியில் உற்பத்தியாகும் புத்திரேகைஅவ்விதம் ரேகை அமைந்தவன் புத்தியின் பலத்தையும் சுதந்திரப் போக்கையும் தன்னிச்சையான பிடிவாத குணத்தையும் காட்டும்.
ஆயுள் ரேகையோடு புத்திரேகையானது இணைந்து உற்பத்தியாகி இருந்தால் தாய்தந்தைமனைவிபிள்ளைகுடும்பமென்று பிரிக்க முடியாத பாசப்பிணைப்பு இருக்கும்.
ஆயுள் ரேகையுடன் இணைந்த உற்பத்தியாகாத புத்தி ரேகையைக் கொண்டவர் எப்போதும் தனித்து நிற்பதில்தனித்து வாழ்வதில் பிரியம் காட்டுவார்.


புதன் ரேகை
இதனைப் ஆரோக்கிய ரேகை என்றும் கூறுவர். இது விதி ரேகையின் அருகே ஆரம்பித்து புதன் மேடு வரை செல்லும். உடல் நிலை எவ்வாறு உள்ளது என்பதை இந்த ரேகை எடுத்துக் காட்டும். உள்ளங்கையில் உள்ள மற்ற ரேகைகளான புத்திரேகைஆயுள் ரேகைஇருதய ரேகை ஆகியவற்றில் ஏதாவது குறைபாடு இருந்தாலும்இந்தப் புதன் ரேகை நன்றாகஅமைந்திருந்தால்இவர்களது தேகத்தில் ஏதாவது பீடைகள் வந்தாலும்,அவையெல்லாம் உடனடியாக நிவர்த்தியாவதற்கு இது உறுதுணையாக இருக்கும். மேலும்புதன் மேடு பலவீனமாக இருந்தாலும் இந்த ரேகை பலமாக இருந்தால் புதன் மேட்டால் ஏற்படும் குறைபாடுகள் யாவும் விலகி விடும். இந்த ரேகை தெளிவாகவும்மெல்லியதாகவும்ஓரளவு அழுத்தமாகவும் இருப்பது நல்லது. தீவுபிளவுவெட்டுக்குறிசங்கிலிக் குறி போன்ற குறைபாடுகள் ஏதும் இல்லாது இது அமைந்திந்தால் இவர்கள் நல்ல பேச்சு சாதூர்யம்சொல்வன்மை கலைவியாபரத்திறமை ஆகியவற்றுடன் பெரும் பணம் சம்பாதித்து சிறப்பாக வாழ்வர்.
இருதய ரேகை
இது புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில்முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்அல்லது கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகைஇருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்துஉள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம். இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும்இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும்,இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். இந்த ரேகை மூலம் அன்புபாசம்காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சூரிய ரேகை
விதி ரேகைக்கு இணையாகமோதிர விரலின் கீழே இருக்கும். இது புகழையும்இகழையும் குறிப்பிட்டுக் காட்டும்


பிற முக்கிய ரேகைகள்...
சுக்கிர ரேகை
மணிக்கட்டிற்கு அருகில் உள்ளங்கையின் கீழிலிருந்துசுண்டு விரலை நோக்கி உள்ளங்கையின் மேல்நோக்கி ஓடுகிறதுதொடர்ச்சியான உடல்நல பிரச்சினைகள்வியாபார புத்திசாலித்தனம்அல்லது தொடர்பு கொள்வதில் திறமை ஆகியவற்றைக்  குறிப்பிட்டுக்காட்டும்.
சுக்கிரனின் வட்டப்பாதை
இது சுண்டு விரலுக்கும்மோதிர விரலுக்கும் இடையில் தொடங்கிமோதிர விரல் மற்றும் நடுவிரல்களுக்கு கீழே ஒரு கீற்று போல ஓடிநடுவிரலுக்கும்,சுட்டு விரலுக்கும் இடையில் முடிகிறதுஇது உணர்வுப்பூர்வமான அறிவு மற்றும் திறமையாக கையாள்வதற்கான திறமை ஆகியவற்றோடு தொடர்புபட்டது.
அப்போலோ ரேகை
இது ஓர் அதிருஷ்ட வாழ்க்கையைக் குறிக்கிறதுஇது மணிக்கட்டில் இருக்கும் சந்தர மேட்டில் இருந்துமோதிர விரலுக்கு (அப்போலோ விரலுக்கு) இடையில்பயணிக்கிறது.
வட்ட ரேகை
இது ஆயுள் ரேகையைக் கடந்து 'x' வடிவத்தை உருவாக்குகிறது. இது மிகவும் தீமையின் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. கைரேகை பார்க்க வருபவருக்கு கவலையை உண்டாக்கும் என்பதால்கைரேகை பார்ப்பவர்கள்பொதுவாக இந்த ரேகையைக் குறிப்பிட்டு கூறுவதில்லை. வட்ட ரேகையின் பொதுவான குறியீடுகள்பிற ரேகைகளால் 'M' என்று உருவாக்கப்பட்டிருக்கும்.
நட்பு ரேகைகள்
குறுகிய கிடைமட்ட ரேகைகள்இது உள்ளங்கையின் மோதும் விளிம்பில் இதய ரேகைக்கும்சுண்டு விரலின் கீழ் பகுதிக்கும் இடையில் காணப்படும்;நெருங்கிய உறவுகள்சிலநேரங்களில் - ஆனால் எப்போதும் கிடையாது - காதல் ஆகியவற்றைக் குறிப்பிட்டுக் காட்டும் என்று நம்பப்படுகிறது.
பயண ரேகைகள்
கிடைமட்ட ரேகைகளான இவை உள்ளங்கையின் புடைத்த விளிம்பில் மணிக்கட்டிற்கும்இதய ரேகைக்கும் இடையில் காணப்படுகிறதுஒவ்வொரு ரேகையும் அந்த நபரால் மேற்கொள்ளப்படும் ஒரு பயணத்தைக் குறிப்பிடுவதாக கூறப்படுகிறது - இந்த ரேகை நீண்டிருந்தால்அந்த நபருக்கு மிகவும் முக்கியமான பயணம் அமையும் என்று கூறப்படுகிறது.
பிற குறியீடுகள்.
நட்சத்திரங்கள்வெட்டுகள்முக்கோணங்கள்சதுரங்கள்திரிசூலங்கள்மற்றும் வளையங்கள் ஆகியவை உட்பட ஒவ்வொரு விரல்களின் கீழேயும் இவை இருக்கின்றனஉள்ளங்களையில் இவை இருக்கும் இடம் மற்றும் பிற ரேகைகளின் குறுக்கீடு இல்லாமல் இருக்கும் தன்மை ஆகியவற்றைக் கொண்டு இவற்றின் அர்த்தங்களும் பாதிப்புகளும் கணிக்கப்படும்.

"ராகு மேடுமற்றும் கேது மேடு என்பவை எங்கே ?" 


ஆரம்ப காலங்களில் ராகு கேது தவிந்த மற்றைய ஏழு கிரகங்களே இருந்தன என்று சங்ககால இலக்கியங்கள் கூறுகின்றன.இதிலிருந்து சாயா கிரகங்களான ராகு மற்றும் கேது என்பவை காலப்போக்கிலேயே தோன்றியுள்ளன எனவும் கைரேகைக்கலை எவ்வளவு பழமையானது என்றும் அறியலாம்..!
ராகு- கேதுவுக்கு தனி நாள்கிழமை ஒதுக்கவில்லை என்றாலும்,ஒவ்வொரு நாளும் மூன்றே முக்கால் நாழிகை (ஒன்றரை மணி நேரம்) ராகுவுக்கு பலம் உண்டு. அதுதான் ராகு காலம்..! அதே போல கேதுவுக்குப் பொருந்திய காலம் எமகண்டம்...! ராகுவும்கேதுவும் தனியான கிரகங்கள் இல்லை. கிரகங்களின் நிழல் என்று விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். வான வெளியில் சூரியனுடைய சுழற்சிப் பாதையும் சந்திரனுடைய சுழற்சிப் பாதையும் ஒரு குறிப்பிட்ட எல்லையில் சந்திக்கும். அப்படி வடதிசையில் ஏற்படும் சந்திப்பை ராகு என்றும்அதேநேரத்தில் அதற்கு நேர் எதிரில் 180-ஆவது டிகிரியில் சமசப்தமமாக ஏற்படும் தென்திசைச் சந்திப்பை கேது என்றும் விஞ்ஞானிகள் கூறுவார்கள். இதையே நமது முன்னோர்களும் மெய்ஞ்ஞானிகளும் ஜோதிட சாஸ்திர மகான்களும் ராகு- கேதுக்களை சாயா கிரகங்கள் (நிழல் கிரகங்கள்) என்று எழுதி வைத்தார்கள். 


This post first appeared on Vedic Astrology, please read the originial post: here

Share the post

கைரேகை சாஸ்திர ரேகைகள்.

×

Subscribe to Vedic Astrology

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×