ஜபம்-பதிவு-948
மரணமற்ற அஸ்வத்தாமன்-80
(கடவுளுக்கே சாபம் கொடுத்தவனின் கதை)
அஸ்வத்தாமன் : எனக்கு அந்த முறைகளைச் சொல் நான் செய்கிறேன்.
Related Articles
கிருஷ்ணர் : உனக்கு அந்த முறைகளைச் சொல்லித் தர முடியாது.
அஸ்வத்தாமன் : ஏன் முடியாது.
கிருஷ்ணர் : நீ ஒரு வரம் தான் கேட்டாய். அந்த ஒரு வரமும் சுதர்சன சக்கரம் வேண்டும் என்பது தான். நான் சொன்னது போல் சுதர்சன சக்கரத்தை உனக்குக் கொடுத்து விட்டேன். உன்னால் அதை எடுக்க முடியவில்லை. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது.
இப்போது இரண்டாவது வரமாக சுதர்சன சக்கரத்தைச் சித்தி செய்யும் முறைகளைச் சொல்லித் தரச் சொல்கிறாய். நான் எப்படி உனக்கு சொல்லித் தர முடியும்.
நீ ஒரு வரம் கேட்டாய். கொடுத்து விட்டேன். நான் சொன்ன வாக்கைக் காப்பாற்றி விட்டேன். என்னுடைய கடமை முடிந்தது.
அஸ்வத்தாமன் : இப்போது நான் என்ன செய்ய வேண்டும். வெறுங்கையுடன் திரும்பிச் செல்லவா.
கிருஷ்ணர் : என்னை நம்பி வந்தவர்களை நான் வெறுங்கையுடன் அனுப்ப மாட்டேன். அனுப்பியதும் கிடையாது, உன்னை ஏமாற்றத்துடன் செல்ல அனுமதிக்க மாட்டேன் உனக்கு சுதர்சன சக்கரத்திற்கு இணையான ஒரு அஸ்திரம் தருகிறேன்.
அஸ்வத்தாமன் : என்ன அஸ்திரம்?
கிருஷ்ணர் : நாராயணாஸ்திரம். நாராயணாஸ்திரம் என்பது திரி அஸ்திரங்களில் ஒன்று. திரி அஸ்திரங்கள் எனப்படுபவை, பிரம்மாஸ்திரம், நாராயணாஸ்திரம், பாசுபதாஸ்திரம். பிரம்மாவுக்கு உரியது பிரம்மாஸ்திரம், நாராயணனுக்கு உரியது நாராயணாஸ்திரம், சிவனுக்கு உரியது பாசுபதாஸ்திரம்.
நாராயணாஸ்திரம் விஷ்ணுவினுடைய நேரடி அம்சம். இந்த அஸ்திரம் விஷ்ணுவினுடைய நேரடி அம்சம் என்ற காரணத்தினால் அவரிடம் இருந்து மட்டும் தான் அதை நேரடியாகப் பெற முடியும்.
இதை ஒரு படையின் மீது பிரயோகம் செய்தால் முதலில் இரண்டு தட்டுகள் கொண்ட ஒரு சக்கரம் உருவாகும்.
வீரர்களின் வலிமைக்கு எற்ற வகையில் அஸ்திரங்கள், ஈட்டிகள், வேல்கள், அம்புகள், கத்திகள் என்று இந்த தட்டு போன்ற சக்கரத்தின் மையத்திலிருந்து வெளிப்படும்.
நாராயணாஸ்திரத்தை ஒரு படையை எதிர்த்து ஒரு முறை ஏவி விட்டால் அது கோடிக்கணக்கான அஸ்திரங்களை தொடர்ந்து எதிரிகள் மீது ஏவிக் கொண்டே இருக்கும். எதிரிகள் அனைவரையும் அழிக்கும் வரை அஸ்திரங்களை அது ஏவிக் கொண்டே இருக்கும்.
தோன்றிய அனைத்து ஆயுதங்களும் மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தும். மிகப்பெரிய அழிவை உண்டாக்கும்.
நாராயணாஸ்திரத்தை எதிர்க்க எதிர்க்க அதன் பலம் கூடிக்கொண்டே இருக்கும்.
அதனை எவ்வளவு ஆக்ரோஷமாக எதிர்க்கிறோமோ அந்த அளவுக்கு அது ஆக்ரோஷமாக செயல்படும்.
அதனை எந்த அளவுக்கு கோபத்துடன் எதிர்க்கிறோமோ, அந்த அளவுக்கு அது கோபத்துடன் செயல்படும்.
அது எதிர்ப்பவர்கள் அனைவரையும் அழித்து விடும் சக்தி வாய்ந்தது.
நாராயணாஸ்திரத்தை யாராலும் எதிர்க்க முடியாது. யாராலும் எதிர்த்து போரிட முடியாது.
ஒரு படையில் ஒரு சாதாரண வீரன் இருந்தால் அவனை அழிப்பதற்கு ஒரு சாதாரண அம்பு உருவாகும். அந்த அம்பு அவனை நோக்கி வரும் போது அந்த அஸ்திரத்தை அந்த வீரன் எதிர்த்தால் அந்த அம்பு அவனை அழிக்கும்.
அதைப்போல அந்தப் படையில் சக்தி வாய்ந்த ஒருவர் இருந்தால் அவரை அழிப்பதற்கு சக்தி வாய்ந்த அஸ்திரம் உருவாகும். அந்த அஸ்திரம் அவரை நோக்கி வரும் போது அந்த அஸ்திரத்தை அந்த சக்தி வாய்ந்த வீரன் எதிர்த்தால் அந்த அஸ்திம் அவரை அழிக்கும்.
உடலால் மண்டியிடுவதாக நடித்து, மனதால் கோபத்துடன் அதனை எதிர்த்தாலும், ஈரேழு பதினாலு லோகத்துக்குச் சென்றாலும் அந்த அஸ்திரம் தேடி வந்து கொல்லும் வலிமை வாய்ந்தது.
நாராயணாஸ்திரத்தை தனி நபர் மீது பிரயோகம் செய்யலாம். ஆனால் அந்த தனி நபர் யாராலும் வீழ்த்த முடியாத சக்தி படைத்த மாவீரனாக இருக்க வேண்டும்.
உனக்கு நான் இந்த நாராயணாஸ்திரத்தை இரண்டாவது வரமாகத் தரவில்லை. உன்னுடைய நண்பன் மேல் நீ வைத்திருக்கும் நட்பின் காரணமாக நான் இந்த அஸ்திரத்தை உனக்குத் தருகிறேன்.
என்னை நம்பி வந்து விட்டாய். வெறுங்கையுடன் உன்னை அனுப்ப மாட்டேன்.
என்னுடைய அம்சமாக இருக்கும் இந்த நாராயணாஸ்திரத்தை உனக்குத் தருகிறேன்.
------K.பாலகங்காதரன்
-----எழுத்தாளர், பேச்சாளர் &
வரலாற்று ஆய்வாளர்,
------31-12-2023
-----ஞாயிற்றுக் கிழமை
////////////////////////////////////////////////////
This post first appeared on பாலாவின௠பாரà¯à®µà¯ˆà®¯à®¿à®²à¯ â€à®šà®¿à®¤à¯à®¤à®°à¯à®•à®³à¯â€, please read the originial post: here