திருக்குறள்-பதிவு-62
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
(Nicolaus Coper Nicus)
போலந்து நாட்டின்
ராயல் புருசியாவில்
தோர்ன் என்ற நகரில்
1473 -ஆம் ஆண்டு
பிப்ரவரி மாதம்
19-ஆம் தேதி
பிறந்தார்
இவரது தந்தை
கிராக்கொவ் நகரில்
பெரிய வணிகர்
தாயார்
பார்பரா வாட்சன்ராட்
தோர்ன் நகரின்
மிகப் பெரிய
செல்வந்தரின் மகள்
இவர்களுக்கு
நான்கு பிள்ளைகள்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் தான்
கடைசி பிள்ளை
11-வது வயதில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் தன்னுடைய
அப்பாவை இழந்தார்
நிக்கோலஸின்
தாய்மாமன்
லூகாஸ்
வாக்ஸன்ரோடு
என்பவர்
நிக்கோலஸையும்
அவரது உடன்பிறப்புகள்
ஒரு சகோதரர்
இரண்டு சகோதரிகள்
ஆகியோரையும்
வளர்த்தார்
கணிதப் பேராசிரியர்
டாமினிகோ நோவாரா
(DOMENICO NOVARA)
என்பவருடைய வீட்டில்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தங்கி இருக்க
வேண்டிய சூழ்நிலை
ஏற்பட்டது
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
வானியல், பூகோளம்
ஆகியவற்றில்
ஆர்வம் எழக்
காரணமாக இருந்தவர்
டாமினிகோ நோவாரா
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் மற்றும்
டாமினிகோ நோவாரா
இருவரும் சேர்ந்து
வானத்தில் உள்ள
விண்மீன்களை
உற்று கவனிப்பதும்
சந்திர கிரகணத்தை
ஆராய்வதும்
போன்ற செயல்களைச்
செய்தனர்
டாலமி மற்றும்
கிரேக்க விஞ்ஞானிகளின்
வானியல் கொள்கைகளை
டாமினிகோ நோவாரா
அவருக்கு கற்பித்தார்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
டாலமியின் பூமி மையக்
கோட்பாட்டை
படித்து அதை
ஏற்றுக் கொள்ளவில்லை
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
மருத்துவப் படிப்பை
தொடராது வெறும்
மதச் சட்ட்த்தில்
டாக்டர் பட்டம் வாங்கி
போலந்துக்கு சென்றார்
அங்கே பிரௌன்பர்க்
என்னும் நகரில்
கிறிஸ்துவப் பாதிரியாக
நியமனம் ஆகிப்
பணிபுரிந்து வந்தார்,.
இத்தகைய
சூழ்நிலையில்
1514-ல் நிக்கோலஸ்
கோப்பர் நிக்கஸ் அவர்கள்
Commentariolus
(Latin
For “Small
Commentary”)
என்ற 40 பக்கங்கள்
கொண்ட புத்தகம்
ஒன்றை வெளியிட்டார்
அதில் முக்கியமாக
7 கோட்பாடுகள்
கூறப்பட்டன
அதில் சொல்லப்பட்ட
முக்கியமான
கோட்பாடு இது தான்
பூமியை மையமாக
வைத்து சூரியன்
சுற்ற வில்லை
சூரியனை மையமாக
வைத்து தான்
பூமி சுற்றுகிறது
என்பதே அந்த
கோட்பாடு
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
தான் சேகரித்து
வைத்திருந்த
பல தகவல்களையும்
தனக்கு முன்னர்
பலர் சேகரித்து
வைத்திருந்த
தகவல்களையும்
வைத்து பல
ஆண்டுகளாக
மக்கள் நம்பிக்
கொண்டிருந்த
பூமி மையக்
கோட்பாட்டை மாற்றி
சூரிய மையக்
கோட்பாட்டை
எடுத்து வைத்தார்
மேலும் அறிவியலில்
பல ஆண்டுகளாக
பலர் சேகரித்து
வைத்திருக்கும்
தகவல்களை
வைத்து ஒரு
முடிவுக்கு வரலாம்
என்ற புதியதொரு
வழிமுறையையும்
கொண்டு வந்தார்
அதற்கு முன்பு
வரை யாராவது
ஒருவரின் எண்ணத்தில்
தோன்றுவது தான்
கண்டுபிடிப்புகள்
என்ற நிலையில்
இருந்தன
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் இதனை
மாற்றிக் காட்டினார்
பல தகவல்களை
வைத்து இப்படித்தான்
இருக்க வேண்டும்
என்று முடிவுக்கு
வந்தார்
இப்போது பல
கண்டுபிடிப்புகள்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ்
வழிமுறையையே
பின்பற்றி
நடத்தப்படுகின்றன
இதனை அறிமுகப்
படுத்தியவரும்
நிக்கோலஸ் கோப்பர்
நிக்கஸ் என்பதை
நினைவில்
கொள்ள வேண்டும்
--------- இன்னும் வரும்
--------- 04-12-2018
///////////////////////////////////////////////////////////
Related Articles
This post first appeared on பாலாவின௠பாரà¯à®µà¯ˆà®¯à®¿à®²à¯ â€à®šà®¿à®¤à¯à®¤à®°à¯à®•à®³à¯â€, please read the originial post: here