இங்கு கோவிலின் உள் கூரை இதயத்தின் நான்கு அறைகளைப் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ராஜசிம்மன் என்ற பல்லவ மன்னன் சிவபெருமானுக்கு கோயில் கட்டி கும்பாபிஷேகத்திற்கு முஹூர்த்தம் ஏற்பாடு செய்தான் கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாள் இரவு, மன்னனின் கனவில் சிவபெருமான் தோன்றி, பூசலார் கட்டும் கோவிலுக்குச் செல்வதாக ஏற்கனவே ஒப்புக்கொண்டதால், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று அறிவித்தார். ராஜா தனது பரிவாரங்களுடன் ஒரு அரசனை விட சிறந்த கோவிலைக் கட்டுவது யார் என்பதைக் கண்டறிய புறப்பட்டார், ஒரு ஏழை மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் விசாரித்ததில், அந்த ஏழை சிவபக்தன் என்பது தெரிந்தது, அவர் தனது இதயத்தில் அவருக்கு கோயில் கட்டி, கும்பாபிஷேகத்திற்கான தேதியை நிர்ணயித்திருந்தார், அது மன்னன் நிர்ணயித்தத நாளாகும்..
பூசார் மனதில் கட்டிய ஆலயத்தை, அரசனால் பார்க்க முடிந்தது. அவர் பூசலார் கட்டிய கோவிலின் வடிவமைப்பில் ஒரு கோவிலைக் கட்டினார், இக்கோவிலில் இதயத்தின் நான்கு அறைகளை ஒத்த உள் கூரை வடிவமைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அருகில் உள்ள திருநின்றவூரில் உள்ள சிவன் கோயில்தான அது.. கோவிலை அடையும் வழி. திருநின்றவூர். சென்னையிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம், திருவள்ளூர், திருத்தணி, கடம்பத்தூர் செல்லும் புறநகர் ரயில்கள் திருநின்றவூரில் நின்று செல்லும். கோயிலுக்கு செல்ல ஷேர் ஆட்டோக்கள், தனியார் ஆட்டோக்கள் மற்றும் பேருந்துகள் உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கோயில் உள்ளது.(2 கிமீ) பேருந்து நிலையம்.திருநின்றவூர்.சென்னையிலிருந்து பேருந்துகள் உள்ளன. விமான நிலையம்.சென்னை..
கோவில் திறத்திருக்கும் நேரம் காலை 7- 12 , மாலை 5-8,