தொப்பி, கண்ணாடி அணிந்தவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகி விடுவார்களா? - பாஜக வி. பி. துரைசாமி |
பாஜக ஐடி விங் மாநில தலைவர் நிர்மல் குமார், பாஜக தலைவர் அண்ணாமலையை '420மலை மற்றும் மனநிலை சரியில்லாதவர் ' என்று மிகக்கடுமையாக விமர்சித்து விட்டு, அதிமுகவில் எடப்பாடி முன்னிலையில் தன்னை இணைத்துக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து மேலும் சிலர் பாஜகவில் இருந்து விலகி, அதிமுகவில் சேர்ந்ததுடன், பாஜக அண்ணாமலையை தாறுமாறாக விமர்சிக்கவும் மறக்க வில்லை.
இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்களான அமர் பிரசாத் ரெட்டி போன்றவர்கள், எதிர்வினை ஆற்றுவதாக நினைத்து எடப்பாடியை கடுமையாக விமர்சித்து பேச பிரச்சினை பெரிதானது.
மனநலம் குன்றிய மனிதரைப் போல் செயல்படும் நபர் அண்ணாமலை - பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவர் நிர்மல்குமார்
ஒரு படி மேலே போன அண்ணாமலை, அதிமுகவுடன் கூட்டணி வைக்க தனக்கு விருப்பமில்லை, அப்படி அமைந்தால் தான் தலைவர் பதவியில் இருந்து விலகி விடுவேன் என்றும் அறைகூவல் விடுத்தார்.
மேலும் ஜெயலலிதாவை விமர்சித்தும் அண்ணாமலை பேசியதால், கொந்தளித்த அதிமுகவினர் தங்களுக்கே உரிய பாணியில் அண்ணாமலையை விமர்சித்தனர்.
இரண்டு பக்கமும் கொடும்பாவிகள் எரிக்கப்பட்ட நிலையில், தற்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகத்தில் பாஜக, அதிமுகவுடன் தான் கூட்டணி என்று திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஜெயலலிதா, கலைஞர் மாதிரி நானும் ஒரு தலைவன் - அண்ணாமலை ஆவேசம்
இதையடுத்து, தற்போது தமிழகத்தில் இட்லி சுட வராத அண்ணாமலை என்ன முடிவு எடுக்க போகிறார் என்பதை பார்க்க, மற்றவர்களை விட தமிழக பிஜேபியினர் அதீத ஆர்வத்தில் உள்ளனர்.
Alliance with AIADMK will Continue - Amit Shah, will Annamalai continue in office?