Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் !



எழுபதுகளில் இளையராஜா பாடல் எண்: 44
வா பொன் மயிலே

இதற்கு முந்திய பகுதியைப்படிக்க  இங்கே சொடுக்கவும்
https://paradesiatnewyork.blogspot.com/2019/08/blog-post_29.html


Add caption
1979ல் வெளிவந்த பூந்தளிர் என்ற படத்தில் இளையராஜா இசையமைத்து புகழ் பெற்ற பாடல் இது.  இது பாடலைக் கேளுங்கள்.


பாடலின் பின்னனி:

காதல் கொண்ட இளைஞன் காதலின் மயக்கத்திலும், ஏக்கத்திலும் காதலியை வர்ணித்துப்பாடும் பாடல் இது. சினிமாப்பாடல்களில் அந்தக்காலக்கட்டத்தில் இதைத் தவிர்க்கமுடியுமா ?

இசையமைப்பு:

எழுபதுகளில் வந்த இளையராஜாவின் இசையமைப்பில் உதித்த மெல்லிசை மெலடி பாடல் இது என்று சொல்லலாம். பெல்ஸ், டிரம்ஸ், புல்லாங்குழல் ஆகியவை ஒரு வெஸ்டர்ன் அமைப்பில் ஒலிக்க, டிரம்ஸில் கெட்டிலில் பிரஸ் வைத்து ஒரு ஜாஸ் இசை போல ஆரம்பித்து முடிய, பாடல் ஆண்குரலில் "வா பொன்மயிலே" என்று ஆரம்பிக்கிறது. அப்போது தபேலா சேர்ந்து கொள்ளும் போதுதான் ஆஹா இது இளையராஜா என்று பொறி தட்டுகிறது. பல்லவி இரண்டாம் முறை ஒலிக்கும் போதுதான் கிராண்ட் வயலின் குழுமம் சேர்ந்து கொண்டு வரிகளுக்குப் பதில் சொல்வது போல் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் ஒலித்து பாடலை ரிச் ஆக்குகிறது. முதல் பிஜிஎம்மில் வயலின் குழுமம், புல்லாங்குழல், டிரம்ஸ் ஆகியவை ஒலித்து முடிய சரணத்தில் தபேலே சேர்ந்து கொள்கிறது. 2ஆவது பிஜிஎம்மில் கீபோர்டு வயலின் பெல்ஸ் ஒலித்து முடிக்க 2-ஆவது சரணத்திலும் தபேலா வந்து வேறுபடுத்திக் காண்பிப்பது இளையராஜாவின் பிரதான ஸ்டைல். இதுவே MSV காலத்திலும் இருந்தது.
பாடலின் வரிகள்:
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
காதலின் ஜாடையெல்லாம் கண்ணழகிலே
கோவிலின் தேரழகோ முன்னழகிலே
கனியே மனம் மயங்க மயங்க வருவாய் சுவை பெருக பெருக
இளமையின் நளினமே இனிமையின் உருவம் மலர
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
மேனியின் மஞ்சள் நிறம் வான் அளந்ததோ
பூமியின் நீல நிறம் கண் அளந்ததோ
அழகே சுகம் வளர வளர நினைவே தினம் பழக பழக
உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது
என்றும் நீயின்றி நானில்லை நானின்றி நீயில்லை கண்மணி
வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தவிக்குது

Panchu Arunachalam with Ilayaraja
பாடலை எழுதியவர் மறைந்த பஞ்சு அருணாசலம் அவர்கள். பாடலை எழுதும்போது அவருக்கு என்ன வயது என்று தெரியவில்லை. ஆனால் உணர்வுகளுக்கும் கற்பனைக்கும், கவிதைக்கும்,காதலுக்கும் வயது ஒரு தடையில்லை   அல்லவா. அட அடா நம் கவிஞர்கள் தான் பெண்களை மானென்றும் மயிலென்றும் எத்தனை முறை சொல்லியிருக்கிறார்கள். இந்தக் காரியத்தில் இவர்களுக்கு தயக்கமுமில்லை, அலுப்புமில்லை, எப்போதும் ஒருவித மயக்கம்தான். இங்கு வெறும் மயில் கூட இல்லை. பொன் மயில் என்று கூறுகிறார். நிறத்தைச் சொல்கிறார். நம் ஆண்களுக்குத்தான் சிவப்பு அல்லது பொன்னிறம் என்றால் பெரும் கிரக்கமயிற்றே. அதனாலல்லவா சிவப்பாக்கும் கீரிம்கள் இந்தியாவில் பெரும் வியாபாரமாக இருக்கிறது. இந்த மாயையிலிருந்து எப்போதுதான் நாம் மீளுவோமோ ?. அதற்கடுத்த வரிகளில், கண்ணழகு, முன்னழகு தேர், கனி, இளமையின் நளினமே, இனிமையின் உருவமே என்று வர்ணித்துத் தள்ளி விடுகிறார். “இளமையின் நளினமே " என்ற வரி சிந்திக்க வைத்து கற்பனைக்குதிரைகளைத் தட்டிவிட்டது. அடுத்த சரணத்திலும் மேனியின் மஞ்சள் நிறத்தை சிலாகித்து ஆரம்பிக்கிறார். "உரிமையில் அழைக்கிறேன் உயிரிலே கலந்து மகிழ" என்ற வரிகள் சிலிர்க்க  வைக்கின்றன. எளிமையான வரிகளுக்குச் சொந்தக்காரர் பஞ்சு அருணாச்சலம்.
பாடலின் குரல்:

Add caption
எஸ்.பி.பியின் இளமைக்கால குரல் சொக்க வைக்கிறது. இளைஞனின் மனதை இளமைக்குரலில் வெளிப்படுத்தும்போது, இளமையுடன் இனிமையும் சேர இனிக்கிறது பாடல். எனக்கு ஒரு சந்தேகம். இந்த மாதிரிப் பாடல்களின் டியூனை யாரை நினைத்து இளையராஜாவும், யாரை நினைத்துக் கொண்டு பஞ்சுவும்,   யாரை மனதில் கொண்டு எஸ்.பி.பியும் பாடியிருப்பார்கள்?. இப்படி உருகித்தள்ளியிருக்கிறார்கள்.
இளையராஜாவின் டிரேட் மார்க் மெலடியில் உதித்த இந்தப் பாடல் கேட்கும் போதெல்லாம் நம் மனதை வருடுகிறது, வருடும். மீண்டும் கேட்டுப் பார்த்தால் உண்மை இதனை உணர்த்தும்.
- தொடரும்






This post first appeared on Paradesi @ Newyork, please read the originial post: here

Share the post

பஞ்சு அருணாசலத்தின் மஞ்சள் நிற மோகம் !

×

Subscribe to Paradesi @ Newyork

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×