Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வலிப்பு: சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அவசியம்!

மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரைப் பாதிப்பது வலிப்பு நோய். இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

எது வலிப்பு? எது வலிப்பு நோய்?

‘வலிப்பு’ என்பது ஒரு நோயின் அறிகுறி மட்டுமே. இதுவே ஒரு நோயல்ல. மூளை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ, அதிகக் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு போன்றவற்றால் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது என்றோ அறிவிக்கும் அறிகுறியாக வலிப்பு ஏற்படுகிறது.

ஒருவருக்கு வலிப்பு வரும்போது கையும் காலும் வெட்டி வெட்டி இழுக்கும். வாயில் நுரை தள்ளும். கண்கள் மேலே சுழன்று, நாக்கு, பற்களுக்கிடையில் சிக்கி, கடிபட்டு, வாயிலிருந்து ரத்தம் வழியச் சுயநினைவை இழந்து தரையில் கிடப்பார். சில நிமிடங்களில் இது சரியாகி, பாதிக்கப்பட்டவர் கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார். இந்த ‘நிகழ்வு’க்குப் பெயர் ‘வலிப்பு’ (Fits/Seizures/ Convulsions). ஒருவருக்கு இரண்டு முறைக்கு மேல் வலிப்பு வந்திருக்குமானால், அவருக்கு வலிப்பு நோய் (Epilepsy) இருப்பதாகக் கொள்ள வேண்டும்.

மூளையில் ஏற்படக்கூடிய ரத்தக் கசிவு, தலையில் பலமாக அடிபடுவது, மூளையில் ஏற்படும் கட்டிகள், உப்புச் சத்து, சோடியம் அளவில் மாற்றங்கள், ஈரலின் மாறுபட்ட செயல்பாடுகள் போன்ற காரணங்களினால் வலிப்பு நோய் ஏற்படும்.

வலிப்பு நோயில் பல்வேறு வகைகள் உள்ளனவா?

ஆமாம். மிகக்குறைந்த அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் வலிப்பிலிருந்து உறுப்புகள்

விரைத்துப் போய் சுயநினைவை இழக்கும் அளவுக்குச் செல்லும் வலிப்பு வரை பல வகை வலிப்புகள் இருக்கின்றன.

பொதுவாக வலிப்பு நோய் சிறு பருவத்திலேயே தொடங்கி விடலாம். இதற்கு முறைப்படி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். அதேபோல திடீர் வலிப்பு நோயை சரியான முறையில் கண்டறிந்து அதற்கேற்ப சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

திடீர் வலிப்பு நோய் என்றால் என்ன?

குடும்பத்தில் யாருக்குமே வலிப்பு நோய் இல்லாமல் இருந்தும் ஒருவருக்கு வலிப்பு நோய் காணப்படலாம். மது அருந்துபவர்களுக்கும் தலையில் பெரிதாக அடிபட்டவர்களுக்கும் இத்தகைய வலிப்பு நோய் ஏற்படக்கூடும்.

வலிப்பு நோய் திடீரென்று ஏற்படக் காரணம்?

மூளையில் ஏற்படக்கூடிய ரத்தக் கசிவு, தலையில் பலமாக  அடிபடுவது, மூளையில் ஏற்படும் கட்டிகள், உப்புச் சத்து, சோடியம் அளவில் மாற்றங்கள், ஈரலின் மாறுபட்ட செயல்பாடுகள்

Dr. G.ஜோஸ் ஜேஸ்பர் MBBS, MCh, PGDMLS, MBA
மூளை நரம்பியல் மற்றும் தண்டுவட அறுவை சிகிச்சை நிபுணர்
காவேரி மருத்துவமனை, திருச்சி கன்டோன்மென்ட்

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai (Alwarpet & Vadapalani), Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai Alwarpet – 044 4000 6000 •  Chennai Vadapalani – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

The post வலிப்பு: சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அவசியம்! first appeared on .



This post first appeared on Health Care Articles For The Layperson, please read the originial post: here

Share the post

வலிப்பு: சரியான நேரத்தில் சரியான சிகிச்சை அவசியம்!

×

Subscribe to Health Care Articles For The Layperson

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×