சேமியா - 2 கப்
எலுமிச்சை - 1
வெங்காயம் - 1
கேரட் - 1
பீன்ஸ் - 4, 5 வரை
பச்சை மிளகாய் - 2
சிவப்பு மிளகாய் - 2
Related Articles
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
மஞ்சள் தூள் - 2 சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு -= 2 தேக்கரண்டி
பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயத்தூள்- 2 சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி இலைகள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
ஒரு டீஸ்பூன் எண்ணெய் , உப்பு சேர்த்து 5 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். சேமியா சேர்த்து மென்மையாகும் வரை வேகவைக்கவும். அடுப்பிலிருந்து இறக்கி, அதிகப்படியான தண்ணீரை வடிகட்டவும். உடனடியாக குளிர்ந்த நீரை ஊற்றி தண்ணீரை முழுவதுமாக வடித்துவிட்டு வேகவைத்த சேமியாவை ஒரு தட்டில் வைக்கவும்.
பீன்ஸ்,கேரட் மற்றும் வெங்காயம், மிளகாயை நீளமாக நறுக்கவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, சேர்த்து, பருப்பு வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும்.
நறுக்கிய வெங்காயம், மிளகாய், இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். சில நொடிகள் வதக்கவும்.
பிறகு நறுக்கிய கேரட் மற்றும் பீன்ஸ் சேர்க்கவும். இன்னும் சில நொடிகள் வதக்கவும்.
மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். இப்போது வேகவைத்த சேமியாவை சேர்த்து நன்றாக கலந்ததும், அடுப்பை அணைக்கவும்.
எலுமிச்சை சாறு சேர்த்து மெதுவாக கலக்கவும்.
கொத்தமல்லி இலைகளால் அலங்கரித்து பரிமாறவும்.