தோசை மாவு - 1 கிண்ணம்
ப்ரோக்கோலி - 1 பெரிய அளவு
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 1
இஞ்சி - ஒரு சிறிய துண்டு
Related Articles
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
முந்திரி - 5 முதல் 6
சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 1 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
ப்ரோக்கோலி பூக்களை பிரித்து நடுத்தர அளவு துண்டுகளாக நீளவாக்கில் நறுக்கவும்.
4 கப் தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு சேர்க்கவும். ப்ரோக்கோலி துண்டுகளை சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். இஞ்சி மற்றும் பூண்டை பொடியாக நறுக்கவும்
தக்காளியை கொதிக்கும் நீரில் சில நிமிடங்கள் வைக்கவும். அதை வெளியே எடுத்து, தோலை உரித்து, நைசாக அரைக்கவும்.
முந்திரி பருப்பை சிறிது தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், பெருஞ்சீரகம் இஞ்சி மற்றும் பூண்டு,வெங்காயம், தக்காளி சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.
சாம்பார் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்றாக கலந்து சில நொடிகள் வறுக்கவும்.
பின்னர் முந்திரி விழுது மற்றும் ப்ரோக்கோலி துண்டுகளை சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும். ஒரு மூடியால் மூடி, ப்ரோக்கோலி மென்மையாகவும், கிரேவி கெட்டியாகவும் இருக்கும் வரை சமைக்கவும்.
ஒரு தவாவை சூடாக்கவும்.
நெய் தடவி தோசை மாவை ஊற்றி வட்டமாகப் பரப்பவும்.
அதைச் சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி தோசையின் நடுவில் ஒரு டேபிள் ஸ்பூன் ப்ரோக்கோலி மசாலாவை சேர்த்து மடிக்கவும். மெதுவாக அதை திருப்பி சில நொடிகள் சமைக்கவும். சாம்பார் மற்றும் சட்னியுடன் பரிமாறவும்.