சோள மாவு - 2 கப்
தயிர் - 2 கப்
உப்பு - சுவைக்கேற்ப
எண்ணெய் - 3 முதல் 4 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
Related Articles
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
மிளகு மற்றும் சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறிய துண்டு பொடியாக நறுக்கியது
முந்திரி - சில
கேரட் துருவல் - 1 அல்லது இரண்டு தேக்கரண்டி
ஒரு கெட்டியான கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத்தூள், மிளகு ,சீரகம், பச்சை மிளகாய் மற்றும் நறுக்கிய இஞ்சி சேர்த்து வதக்கவும். பிறகு மசாலாவுடன் சோள மாவு சேர்த்து சில நொடிகள் அல்லது நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும் ஆறவைத்து உப்பு சேர்க்கவும்.
அதனுடன் தயிர் சேர்த்து 5 முதல் பத்து நிமிடங்கள் மட்டும் ஊற வைக்கவும். ஒரு டேபிள்ஸ்பூன் தண்ணீர் ஊற்றவும். பிறகு நன்றாக கலக்கவும். இட்லி மாவு போல் செய்து கொள்ளவும். தயிர் மிகவும் புளிப்பாக இருந்தால், ஒரு கப் தயிர் மற்றும் ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.
இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். இட்லி தட்டில் நெய் தடவி சில கேரட் துருவல்களை வைக்கவும். பின்னர் கேரட் துருவல் மீது இட்லி மாவை ஊற்றி 12 முதல் 15 நிமிடங்கள் ஆவியில் வேகவைக்கவும். இட்லி குக்கரில் இருந்து தட்டுகளை அகற்றி, கரண்டியைப் பயன்படுத்தி, இட்லிகளை வெளியே எடுக்கவும்.
விரும்பிய சட்னியுடன் பரிமாறவும்.