சௌ சௌ – 1
சாம்பார் வெங்காயம் - 8
பூண்டு துருவல் - சிறிதளவு
தக்காளி - 1
சிவப்பு மிளகாய் - 3 முதல் 4
Related Articles
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
இட்லி மிளகாய்ப் பொடி - 2 தேக்கரண்டி
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
சௌசௌவிலிருந்து தோல் மற்றும் விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டவும்.
தக்காளியை நடுத்தர அளவு துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிவப்பு மிளகாய், சாம்பார் வெங்காயம், பூண்டு மற்றும் சௌசௌ துண்டுகளை சேர்க்கவும். சில நிமிடங்கள் வதக்கவும்.
பிறகு இட்லி மிளகாய்ப்பொடி,தக்காளி, புளி சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து சில நிமிடங்கள் வேக வைத்து இறக்கவும். அதை ஆறவைத்து, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.
கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும். இந்த சௌ சௌ சட்னியை இட்லி/தோசை/தயிர் சாதத்துடன் பரிமாறலாம். இதை சூடான சாதத்துடன் கலந்தும் சாப்பிடலாம்.