Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கற்பூரவல்லி தயிர் பச்சடி.


கற்பூரவல்லி இலைகள் - 5 முதல் 6 

பச்சை மிளகாய் - 1

புதிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு

கருப்பு மிளகு - 5 முதல் 6

சீரகம் - ¼ தேக்கரண்டி

தேங்காய் துருவல் - 1 டேபிள் ஸ்பூன்

தயிர் - 1 கப்

தாளிக்க:

எண்ணெய் - ½ தேக்கரண்டி

கடுகு - ½ தேக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி

பெருங்காயத்தூள்- இரண்டு சிட்டிகைகள்

உப்பு -  சுவைக்கேற்ப

"ஓம வல்லி இலைகள்" அல்லது கற்பூரவல்லி இலைகள்" ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஒரு சிறிய கடாயில் அரை தேக்கரண்டி எண்ணெய் வைக்கவும். மிளகு, சீரகம், பச்சை மிளகாய், இஞ்சி சேர்க்கவும். சில நொடிகள் வறுக்கவும். பிறகு தேங்காய் துருவல்,பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் சில நொடிகள் வதக்கவும். அடுப்பை அணைத்துவிட்டு கற்பூரவல்லி  இலைகளை சேர்த்து நன்கு கிளறவும். ஆறவைத்து விழுதாக அரைக்கவும்.

தயிரை நன்றாக அடித்து, விழுதை உப்பு சேர்த்து கலக்கவும்

சிறிய கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு  மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பருப்பு வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வதக்கவும். இந்த மசாலாவை தயிர் கலவையில் சேர்த்து நன்கு கலக்கவும். கற்பூரவல்லி தயிர் பச்சடி தயார்.



This post first appeared on Vengu Recipes, please read the originial post: here

Share the post

கற்பூரவல்லி தயிர் பச்சடி.

×

Subscribe to Vengu Recipes

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×