கத்தரிக்காய் - 4
தக்காளி - 2
பெரிய வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 4
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
Related Articles
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணெய் - 2 தேக்கரண்டி
கடுகு - ½ தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
கத்தரிக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 2 முதல் 3 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். மிக்ஸியில் போட்டு நைசாக அரைக்கவும்.
வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு,உளுத்தம் பருப்பு போடவும். பருப்பு பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும்.
இப்போது, கத்தரிக்காய் விழுது, மஞ்சள் தூள்,பெருங்காயத்தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து கலவையை கலக்கவும்.
ஒரு மூடி கொண்டு மூடி, கொதிக்க அனுமதிக்கவும்.
இந்த சட்னியை இட்லி அல்லது தோசையுடன் பரிமாறலாம்.