கேரட் - 2
உருளைக்கிழங்கு - 2
வெங்காயம் - 1
பூண்டு கிராம்பு (சிறிய அளவு) - 2
வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் - 1 தேக்கரண்டி
Related Articles
பிரியாணி இலை -3
தண்ணீர் - 4 முதல் 5 கப்
மிளகு தூள் மற்றும் உப்பு - தேவைக்கேற்ப
உருளைக்கிழங்கு மற்றும் கேரட்டில் இருந்து தோலுரித்து சிறிய க்யூப்ஸாக வெட்டவும். உங்களுக்கு இரண்டு கப் துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் கேரட் தேவைப்படும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கவும்.
ஒரு பிரஷர் குக்கரில் வெண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை மற்றும் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பூண்டு கிராம்பு, துண்டுகளாக்கப்பட்ட உருளைக்கிழங்கு மற்றும் கேரட்,பிரியாணிஇலை சேர்த்து இரண்டு நிமிடங்கள் குறைந்த தீயில் வதக்கவும். 4 முதல் 5 கப் தண்ணீர் சேர்க்கவும். மூடி வைத்து 3 விசில் வரும் வரை செய்யவும். சில நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து அதை நன்றாக கலக்கவும். மிளகு தூள் மற்றும் உப்பு தூவவும். கேரட், உருளைக்கிழங்கு சூப் தயார்.