குடமிளகாய்,கத்தரி சேர்த்து செய்யப்பட்ட இந்த கறியை சாதத்துடன் பரிமாறலாம்.நன்றாக இருக்கும். குடமிளகாய்- 1 கத்தரிக்காய்- 2, தக்காளி - 1, பெரிய வெங்காயம் - 1, சிவப்பு மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, கொத்தமல்லி தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் - 1/4 தேக்கரண்டி, புளி சாறு - 1 அல்லது 2 தேக்கரண்டி (விரும்பினால்), எண்ணெய் - 1 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, சீரகம் - 1/2 தேக்கரண்டி, அரிசிமாவு- 2 சிட்டிகை, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, கத்தரிக்காயை நீளவாக்கில் நறுக்கவும். குடைமிளகாயையும் அதே அளவில் நறுக்கவும். வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் வைக்கவும். சூடானதும் கடுகு, சீரகத்தைப் போடவும். பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். தக்காளி துண்டுகளை சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். மல்லி தூள்,சிவப்பு மிளகாய் தூள்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். நன்கு கலந்து புளி சாறு,அரிசிமாவு சேர்க்கவும். இப்போது கத்தரிக்காயை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும். பிறகு கேப்சிகம் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும். ஒரு கைப்பிடி அளவு தண்ணீர் தெளித்து ஒரு மூடியால் மூடவும். குறைந்த தீயில் 2 முதல் 3 நிமிடங்கள் சமைக்கவும். நன்கு வெந்ததும் இறக்கவும். நறுக்கிய கொத்தமல்லி இலைகளால் அலங்கரிக்கவும்.