கேப்சிகம் - 2, உளுத்தம் பருப்பு - 1/2 கப், பயத்தம் பருப்பு - 1/4 கப், சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 2 சிட்டிகை, எண்ணெய் - 2 தேக்கரண்டி, கடுகு - 1/2 தேக்கரண்டி, அரிசிமாவு- 2 சிட்டிகை, நறுக்கிய வெங்காயம் - 1 தேக்கரண்டி, கறிவேப்பிலை - சிறிதளவு, உப்பு - சுவைக்கேற்ப, குடமிளகாயைக் கழுவி சிறு துண்டுகளாக நறுக்கவும். உளுத்தம் பருப்பை வெளிர் பழுப்பு நிறமாக மாறும் வரை வறுக்கவும். இரண்டு கப் தண்ணீர் சேர்த்து 5 முதல் 6 விசில் வரை ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து சமைக்கவும். கடாயில் எண்ணெய் வைக்கவும். சூடானதும் கடுகு, பெருங்காயம் போடவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். கறிவேப்பிலை மற்றும் கேப்சிகம் துண்டுகளை சேர்க்கவும். சிறிது நேரம் வறுக்கவும். சாம்பார் தூள், அரிசிமாவு,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து கேப்சிகம் மென்மையாகும் வரை சமைக்கவும். சமைத்த பருப்புகளை (பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு) பிசைந்து, அதை குடைமிளகாயுடன் சேர்க்கவும். நன்கு கலந்து சில நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.குடமிளகாய் கூட்டு தயார்.