பெரிய கேரட் - 2 சிவப்பு மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி அரிசிமாவு- 1 தேக்கரண்டி வறுத்த வெந்தயப் பொடி - ஒரு சிட்டிகை பெருங்காயத்ததூள்- 1தேக்கரண்டி எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி எண்ணெய் - 2 தேக்கரண்டி கடுகு - 1 தேக்கரண்டி உப்பு - 1 தேக்கரண்டி
கேரட்டை கழுவி தோலை உரிக்கவும்.சிறு துண்டுகளாக நறுக்கவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போடவும். அரிசிமாவு,சிவப்பு மிளகாய் தூள் சேர்த்து ஒரு நொடி வதக்கவும். பிறகு கேரட் துண்டுகளை சேர்த்து நன்றாக கலக்கவும். உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் ஒரு முறை சிறு தீயில் சில நொடிகள் கிளறி அடுப்பை அணைக்கவும். ஆறியதும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கிளறவும்.தயிர் சாதத்துடன் நன்றாக இருக்கும்.