ஒரு கிராமத்தில் இரு நண்பர்கள் இருந்தார்கள். இருவரும் நெடுநாள் நண்பர்களாக இருந்தார்கள். அவர்களில் ஒருவன், வெளியூர் போகவேண்டியிருந்தால், தன்னிடம் உள்ள ஆயிரம் பொற்காசுகளையும், தன் நண்பனிடம் கொடுத்து நான் திரும்ப வரும்பொழுது பெற்றுக் கொள்கிறேன் என்றான்.
Related Articles
வெளியூர் சென்றவன் திரும்பிவந்து கேட்ட போது, 'உன் பொற்காசை எல்லாம் எலி தின்று விட்டது' என்று நண்பன் கூறி விட்டான். ' சரி, போனால் போகிறது' என்று சொல்லி விட்டு, மீண்டும் அவன் முன்போல நண்பனாகவே இருந்து வந்தான்.
பிறகு ஒருமுறை அந்த நண்பனுடைய வீட்டில் ஒரு விருந்து நடந்தது. விருந்துக்கு அந்த வெளியூர் சென்று வந்த வணிகன், தன் நண்பனுடைய வீட்டில் எண்ணெய் தேய்த்துக்கொண்டான். நண்பனுடைய பிள்ளைக்கும் எண்ணெய் தேய்த்து விட்டான். பிறகு அந்தப்பிள்ளையையும் கூட்டிக்கொண்டு குளத்திற்கு குளிக்கச் சென்றான்.
குளித்தபின், அந்தப்பிள்ளையைத் தகுந்த ஒரிடத்தில் ஒளித்து வைத்துவிட்டுத் தான் மட்டும் திரும்பி வந்தான்.
வீட்டுக்குத் திரும்பி வந்து சேர்ந்த வணிகனைப் பார்த்து, அவனுடைய நண்பன் 'என் பிள்ளை எங்கே? என்று கேட்டான்.'உன் பிள்ளையைப் பருந்து தூக்கிக்கொண்டுே பே போய்விட்டது! என்றான் வணிகன்.
உடனே மற்ற வணிகனுக்குக் கோபம் வந்துவிட்டது. 'எங்கேயாவது பிள்ளையைப் பருந்தெடுத்துப் போகுமா? என்று சண்டைக்கு வந்துவிட்டான். வாய்ச்சண்டை முற்றிக் கைச்சண்டையாகி விட்டது.
உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் ஊர் தலைவரிடம் அழைத்துச் சென்றார்கள். ஊர் தலைவர் அந்த வணிகனைப் பார்த்து' ஏனையா இது என்னே வேடிக்கை! எங்கேயாவது பிள்ளையைப் பருந்து தூக்கிக்
கொண்டு போகுமா?' என்று கேட்டார்.
ஐயா, ஆயிரம் பொற்காசுகளை ஒர் அணுவும் மீதி வைக்காமல், எலி கடித்துத் தின்றிருக்கும் போது, பிள்ளையைப் பருந்து தூக்கிப் போவது என்ன அதிசயம்? என்று கேட்டான்.
'இந்த அதிசயம் எங்கே நிகழ்ந்தது!' என்று தலைவர் விசாரித்தார். உடனே அவன் முன் நடந்தவைகளைக் கூறினான்.
'அப்படியானால், நீ செய்தது சரிதான்!' என்று சொல்லிவிட்டு, தலைவர் அந்த வணிகனுடைய நண்பனைப் பார்த்து, 'ஆயிரம் பொற்காசுகளையும் நீ திருப்பிக்கொடுத்தால், அவன் உன் பிள்ளையைத் திருப்பிக்கொடுப்பான்' என்று தீர்ப்பளித்தார்.
'சரியென்று ஒப்புக் கொண்டு இருவரும் திரும்பினார்கள்.
அந்த நண்பன் அந்த ஆயிரம் பொற்காசுகளை திரும்பிெ செகொடுக்க முடியாமல், அதற்கு பதிலாக வீடு, நிலம் அனைத்தையும் கொடுக்க வேண்டி யிருந்தது. இதனால் அவன் ஏழையாகி விட்டான்.
வஞ்சகம் செய்பவர்கள் வாழமாட்டார்கள்.