Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

கிணற்றில் இருக்கும் தண்ணீர்



அக்பர் ஆட்சிக் காலத்தில் சுக்தேவ் என்ற விசாயி வாழ்ந்து வந்தார். அவர் வயதானவர் நல்ல குணம் உடையவர். தன்னுடைய தினமும் கடினமாக உழைத்து வந்தார்.
சுக்தேவ் பக்கத்து நிலத்தின் சொந்தக்காரன் பால்ராஜ் என்ற வாலிபன் கொஞ்சம் கெட்ட குணம் உடையவன், பலரையும் ஏமாற்றி வந்தான்.

சுக்தேவ் அவனிடமிருந்து ஒரு கிணறை விலைக்கு வாங்கி, அதற்கு உண்டான முழுபணத்தையும் கொடுத்தான்.

கொஞ்சநாளிலேயே பால்ராஜ் வந்து மீண்டும் அதிகப்பணம் கேட்டான். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஆனது. இறுதியில் பீர்பாலிடம் சென்று நியாயம் கேட்க முடிவு செய்தனர்.


அவர்கள் பீர்பாலை சந்தித்த போது, சுக்தேவ் அவரிடம் ஐயா,  "நான் ஒரு வாரத்திற்கு முன்பு பால்ராஜ்ரிடம் ஒரு கிணறு வாங்கினேன் அதற்கான பணத்தையும் உடனே கொடுத்து விட்டேன் ஆனால் நேற்று வந்து இன்னும் அதிக பணம் கொடுக்க வேண்டுமேணுகிறார்" என்று கூறினார்.

மேலும் அவர் "பால்ராஜ் கிணற்றில் இருக்கும் நீருக்கு தனியாக பணம் வேண்டும் என்கிறார். இது என்ன நியாயம் அவர் என்னை ஏமாற்றுகிறார்" என்றார்.

அதற்கு பால்ராஜ் ஆமாம் அவருக்கு கிணறு விற்றது உண்மை தான் ஆனால் அதற்குள்ள நீரை விற்கவில்லை. அந்த நீரை பயன்படுத்த விரும்பினால் அதையும் பணம் கொடுத்து வாங்க வேண்டும் என்றார்.

பீர்ப்பால், சிறுது நேரம் யோசித்து பால்ராஜ்ரிடம் நீ சுக்தேவ்க்கு கிணறை விற்றது உண்மைதானே?  என்று கேட்டார்.
ஆமாம் அவருக்கு கிணறை விற்றது உண்மைதான் என்றான் பால்ராஜ்.

சரி! அப்படியானால் எதற்கு உன்னுடைய தண்ணீரை கிணற்றில் விட்டு வைத்திருக்கிறாய்? "சுக்தேவக்கு கிணறை விற்கும் போது எல்லா தண்ணீரையும் எடுத்து இருக்க வேண்டும்" என்று கண்டிப்பான குரலில் கூறினார்.

பால்ராஜ் ஏதும் பேசாமல் நின்றார்.

 பீர்பால் அவனை கோபத்துடன் பார்த்து நீதான் உன்னுடைய தண்ணீரை சுக்தேவ் கிணற்றில் வைத்திருப்பதற்கு அவருக்கு வாடகை தர வேண்டும் இது உன் தவறு என்று கூறினார்.













This post first appeared on ThamilSmallStories, please read the originial post: here

Share the post

கிணற்றில் இருக்கும் தண்ணீர்

×

Subscribe to Thamilsmallstories

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×