உங்கள்பலசந்தேகங்களுக்கு இதில்தீர்வுஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பலவரிகள்மிகமிகஆழமானபரந்தபொருளைகொண்டவை.
* சுவாமி விவேகானந்தர் : நாம்ஏன்எப்போதும் மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறோம்?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பத்தையே நினைத்து கற்பனைசெய்துகொண்டிருப்பது உன்வழக்கமாகிவிட்டது. அதனால்உன்னால் மகிழ்ச்சியுடன் இருக்கமுடியவில்லை.
* சுவாமி விவேகானந்தர் : நல்லவர்களுக்கு மட்டும் எப்போதும் துன்பம் ஏன்?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : உரசாமல் வைரத்தை பட்டைதீட்டமுடியாது. நெருப்பிலிடாமல் தங்கத்தை தூய்மைப்படுத்த முடியாது. நல்லவர்கள் சோதனைக்குள்ளாவார்கள். ஆனால்அவர்கள் பாதிப்புக்குள்ளாகமாட்டார்கள். அந்தசோதனையின் மூலம்அவர்கள் மேன்மையடைவார்களே தவிரகீழேசெல்லமாட்டார்கள். (By experience their life becomes better, not bitter!)
* சுவாமி விவேகானந்தர் : அப்போது, சோதனைகள் நன்மைக்கு என்றுசொல்கிறீர்களா?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : ஆம். அனுபவத்தை விடபெரியஆசிரியர் வேறுயாருமில்லை. அதுமுதலில் சோதனையை கொடுத்துவிட்டு பிறகுதான்பாடத்தை போதிக்கும்.
* சுவாமி விவேகானந்தர் : கணக்கற்ற பிரச்னைகளில் மூழ்கிதவிப்பதால் நாங்கள் எங்கேபோகிறோம் தெரியவில்லை….
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : வெளியேபார்த்தால் எங்கேபோகிறோம் என்றுஉனக்குபுரியாது. உனக்குள்ளே பார். புரியும். கண்களால் பார்க்கத் தான்முடியும். ஆனால்உள்ளத்தால் தான்வழியைகாட்டமுடியும். (Eyes provide sight. Heart provides the way.)
* சுவாமி விவேகானந்தர் : சரியானபாதையில் போகும்போதும் தோல்விஅடிக்கடி ஏற்படுகிறதே?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : செல்லும் பாதையில் வெற்றிஎன்பதுபிறரால் அளக்கப்படுவது. ஆனால்அதில்கிடைக்கும் திருப்தி என்பதுஉன்னால் உன்னால் மட்டுமே உணரப்படுவது.
* சுவாமி விவேகானந்தர் : கடினமான சூழ்நிலைகளில் எப்படிநீங்கள் உற்சாகம் குறையாமல் உத்வேகத்துடன் இருக்கிறீர்கள்?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : எப்பொழுதும், இனிஎப்படிபோகப்போகிறோம் என்றுஅச்சப்படுவதைவிட இதுவரைநீஎப்படிவந்திருக்கிறாய், எதையெல்லாம் கடந்துவந்திருக்கிறாய் என்றுபார். உனக்குகிடைத்த வரங்களை எண்ணிக்கொள். இழந்தவைகளை அல்ல.
* சுவாமி விவேகானந்தர் : இந்தமக்களைநினைத்து நீங்கள் வியக்கும் விஷயம்எது?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : துன்பப்படும்போது “எனக்குஏன்? என்னைமட்டும் ஏன்??” என்றுகேட்பவர்கள் இன்பத்தின் போதுஅந்தகேள்வியை கேட்பதில்லை. அதைநினைத்து தான்வியக்கிறேன்.
* சுவாமி விவேகானந்தர் : வாழ்க்கையில் மிகச்சிறந்தவைகளை நான்அடைவதுஎப்படி?
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : உன்கடந்தகாலத்தை வருத்தமின்றி ஏற்றுக்கொள். நிகழ்காலத்தை நம்பிக்கையோடு கைக்கொள். எதிர்காலத்தை அச்சமின்றி எதிர்நோக்கு. இதுவேவாழ்க்கையில் சிறந்தவைகளை பெறகடைபிடிக்கவேண்டிய நியதி.
* சுவாமி விவேகானந்தர் : கடைசியாக ஒரேஒருகேள்வி. சிலநேரங்களில் என்னுடைய பிரார்த்தனைகளை இறைவன்கேட்கவில்லையோ என்றுதோன்றுகிறது.
** இராமகிருஷ்ண பரமஹம்சர் : கேட்கப்படாத பிரார்த்தனைகள் என்றுஎதுவுமே இல்லை. (There are no unanswered prayers!) அச்சத்தை விடு. நம்பிக்கை கொள். வாழ்க்கை என்பதுதீர்வுகாணப்படவேண்டிய ஒருபுதிர்தானேதவிரபிரச்னை அல்ல. எப்படிவாழவேண்டும் என்றுமட்டும் நாம்அறிந்து கொண்டால் வாழ்க்கை மிகமிகஇனிமையாக மாறிவிடும். என்னைநம்பு.