சர்வதேச கிரிக்கெட்டில் மேலும் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் கொண்டு வருவதற்காக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிபுணர்களுடன் ஆலோசித்து விதிமுறைகளில் மாற்றம் செய்வது உண்டு.
அந்த வகையில் தற்போது கிரிக்கெட்டில் முக்கியமான சில விதிமுறைகள் மாற்றப்படுகிறது. அது நாளை (வியாழக்கிழமை) முதல் அமலுக்கு வருவதாக ஐ.சி.சி. நேற்று அறிவித்தது. ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் இந்தியா– ஆஸ்திரேலியா தொடரின் போது புதிய விதிகள் பயன்படுத்தப்படாது என்று ஏற்கனவே தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.சி.சி.யின் புதிய விதிமுறை விவரம் வருமாறு:–
*டெஸ்ட் கிரிக்கெட்டில், 80 ஓவர்களுக்கு பிறகு கூடுதலாக இரண்டு டி.ஆர்.எஸ். வாய்ப்பு வழங்கப்படும் நடைமுறை நீக்கப்படுகிறது. அதாவது இனி நடுவரின் தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய உதவும் டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை ஒரு இன்னிங்சில் இரு அணியும் தலா 2 முறை மட்டுமே பயன்படுத்த முடியும். அப்பீல் சரியாக இருக்கும் பட்சத்தில் அது வழக்கம் போல் நீடிக்கும். முன்பு இருந்த கூடுதல் வாய்ப்பு கிடையாது.
* சர்வதேச 20 ஓவர் போட்டிகளிலும் இனி டி.ஆர்.எஸ். பயன்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு இன்னிங்சிலும் தலா ஒரு டி.ஆர்.எஸ். வாய்ப்பு வழங்கப்படும்.
*பேட்ஸ்மேன் அடிக்கும் ஷாட்டை எல்லைக்கோடு அருகே தாவி குதித்து கேட்ச் செய்ய முயலுகையில், பந்தை பிடிக்கும் போது பீல்டரின் கால்கள் கட்டாயம் எல்லைக்கோட்டின் உள்பகுதியில் இருக்க வேண்டும். மாறாக எல்லைக்கோட்டுக்கு வெளியே இருந்து (நீண்ட தூரம் ஓடி வரும் போது இவ்வாறு நடப்பது உண்டு) ‘ஜம்ப்’ செய்து கேட்ச் செய்தபடி உள்ளே வந்தால், அது அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டு, பவுண்டரியாக கணக்கில் கொள்ளப்படும்.
*ரன்–அவுட்டில் இருந்து தப்பிக்க ஓடும் பேட்ஸ்மேன் கிரீசுக்குள் பேட்டை வைத்து விட்ட பிறகு அவரது பேட் தரையில் இருந்து சற்று மேலே தூக்கிக்கொண்டு இருந்தாலோ அல்லது கிரீசை தொட்ட பிறகு பேட்ஸ்மேனின் தொடர்பில் இருந்து பேட் நழுவி இருந்தாலோ அந்த சமயத்தில் ஸ்டம்பை தாக்கும்பட்சத்தில் அது ரன்–அவுட் ஆக தீர்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்த முறையில் அதிரடி திருத்தம் செய்யப்படுகிறது. ஒரு முறை பேட்டை கிரீசுக்குள் வைத்து விட்டால் போதும். அதன் பிறகு பேட் அந்தரத்தில் இருந்தாலும் இனி ரன்–அவுட் செய்ய முடியாது. இது பேட்ஸ்மேனுக்கு கூடுதல் அனுகூலமாக அமையும். ஸ்டம்பிங்குக்கும் இந்த விதி பொருந்தும்.
*பேட்ஸ்மேன் ஷாட் அடிக்கும் போது, அருகில் நிற்கும் பீல்டரின் ஹெல்மெட்டிலோ அல்லது விக்கெட் கீப்பர் ஹெல்மெட்டிலேயே பந்து பட்டு எழும்பும் போது அதை கேட்ச் செய்தால் பேட்ஸ்மேன் அவுட் என்றே அறிவிக்கப்படுவார். இந்த மாதிரி பந்து பட்டு வரும் போது ரன்–அவுட் அல்லது ஸ்டம்பிங்கும் செய்யலாம்.
*களத்தில் நிற்கும் பீல்டர்கள் தங்களது அப்பீலை வாபஸ் பெறும் போது, அவுட் ஆனதாக வெளியேறும் பேட்ஸ்மேனை நடுவர் எந்த நேரத்திலும் திரும்ப அழைக்கலாம். அதாவது முன்பு பேட்ஸ்மேன் எல்லைக்கோட்டை கடந்து விட்டால் திரும்ப அழைக்க முடியாது. இனி அப்படி கிடையாது. பேட்ஸ்மேன் எல்லைக்கோட்டை கடந்திருந்தாலும் அடுத்த பந்தை வீசுவதற்குள் அழைக்க முடியும்.
*பேட்டுகளின் அளவுகளில்