Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

குட்டி காதல்கதை



திவ்யாவும், அஜினும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாய் படித்தவர்கள்...... 


படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி இருவரும் ஒன்றாகவே இருந்து வந்தனர்..... 

அனைத்து விஷயங்களையும் இருவரும் பகிர்ந்து கொண்டனர்......... 

இப்பொழுது கல்லூரி இறுதி ஆண்டில் இருவரும் படிக்கின்றனர். 

ஒருநாள் இருவரும் காரில் சென்று கொண்டிருக்கின்றனர், 
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது திவ்யா ஒரு அழகான க்ரீடிங் கார்டுடன் ஒரு காதல் கடிதத்தையும் நீட்டுகிறாள்.......... 


அதை சற்றும் எதிர் பார்க்காத அஜின் அதிர்ச்சியுடன் அவளை பார்த்து........ 

"நீ இப்படி இருப்பாய் என்று கொஞ்சம் கூட நான் எதிர் பார்க்கல" என்று கூறி ரொம்ப திட்டி காரை விட்டு கீழே இறங்கு என்று சொல்லி இறக்கி விடுகிறான்..... 


அவன் அப்படியே சோகமாக இருக்க, அவள்நடந்து கண்ணீருடன் சென்று கொண்டிருக்கிறாள்.......... 


அப்பொழுது எதிரே வந்த லாரி அவள் மேல் மோதி அடிபட்டு அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரை விடுகிறாள்....... 


அதை பார்த்ததும் அஜினுக்கு ரொம்பவும் வருத்தமாக இருந்தது என்னால் தானே அவள் இப்படி ஆனாள் என்று மனதிற்குள் சொல்லி கதறி அழுகிறான்.......... 

காரில் அவள் அமர்ந்திருந்த கார் சீட்டில் அவள் எழுதிய அந்த கடிதம் இருந்தது..... 

அதை எடுத்து படித்த அவனுக்கு மேலும் துக்கம் அதிகரித்தது 
அதில் எழுதப்பட்டிருந்த காதல் வரிகள்(வலிகள்).......... 

"நீ என்னை விட்டு பிரியும் போது 
நான் இறந்திருப்பேன்" 

"நான் உன்னை பிரியும் போது 
இந்த உலகில் உயிருடன் இருக்கமாட்டேன்" 

இப்போது இவன் அவளுக்கு கொடுக்கும் காதல் கடிதம் கண்ணீர் துளிகள் மட்டுமே......... 

குறிப்பு: நான் கல்லூரியில் படிக்கும் போது எங்களுக்கு கிடைத்த message !!!!!!!!!!!

By
Priya Aissu


This post first appeared on தமிழ் மொழி, please read the originial post: here

Share the post

குட்டி காதல்கதை

×

Subscribe to தமிழ் மொழி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×