Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

யார் கடவுள்



ஒரு ஆத்மா கடவுளிடம் கேட்டது,''நான் 

குழந்தையாய்ப் பிறக்க வேண்டுமே!'' 
கடவுள் சொன்னார்,''பிறந்து கொள்,'' 
பிறந்த குழந்தை கடவுளிடம் கேட்டது,''நான் 
வளர வேண்டுமே!'' 
கடவுள் சொன்னார்,''வளர்ந்து கொள்.'' 
வளர்ந்த குழந்தை கேட்டது,''நான் படிக்க 
வேண்டுமே!'' 
கடவுள் சொன்னார்,''படித்துக் கொள்.'' 
படித்த பையன் கேட்டான்,''எனக்கு நல்ல 
வேலை வேண்டுமே?'' 
கடவுள் சொன்னார்,''தேடிக் கண்டுபிடி,'' 
வேலையில் சேர்ந்த இளைஞன் கேட்டான்,''எனக் 
கு திருமணம் செய்ய வேண்டுமே!'' 
கடவுள் சொன்னார்,''நல்ல பெண்ணாய்ப்பார்த 
்து திருமணம் செய்துகொள்.'' 
திருமணம் ஆனதும் கேட்டான்,''நல்ல 
குழந்தை வேண்டுமே!'' 
கடவுள் சொன்னார்,''பெற்றுக் கொள்.'' 
வயதானபின் அவன் கேட்டான்,''நான் நல்ல 
படியாக இறக்க வேண்டுமே,'' 
கடவுள் சொன்னார்,''இறந்து கொள்.'' 
அவன் வெகுண்டு கடவுளிடம் கேட்டான்,''ஆரம் 
பத்திலிருந்து எல்லாமே நீயே செய்துகொள் 
என்றே கூறி வருகிறாய்.அப்புறம் கடவுள் 
என்று சொல்லிக் கொள்ளும் உனக்கு என்னதான் 
வேலை?'' 
கடவுள் புன்னகையுடன் சொன்னார்,''இத்த 
னையிலும் உனக்கு ஏற்பட்ட அனுபவம் 
இருக்கிறதே அதுதான் நான்.'' 

நன்றி முகநூல்


This post first appeared on தமிழ் மொழி, please read the originial post: here

Share the post

யார் கடவுள்

×

Subscribe to தமிழ் மொழி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×