Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

வண்ணமில்லா பட்டாம்பூச்சிகள்

கருப்பு வெள்ளை சிறகுகள் கொண்டு பெண் பட்டாம்பூச்சி ஒருத்தி பிறந்தாள்

வண்ணங்கள் பூசும் ஆசை கொண்டு பறந்து பார்க்க துணிந்தாள்

"அம்மா, இக்காடும் மலையும் பாதுகாப்பற்றது, பறக்காதே" என பச்சை வண்ணத்தை தூக்கி எறிந்தது, அப்பா பட்டாம்பூச்சி

"பெண் பிள்ளை என்பது, வயிற்றில் நெருப்பு என்பது சரியாய் தான் இருக்கிறது. பேசாம கூட்டுக்குள்ள இரு" என்று சொல்லி ஆரஞ்சு வண்ணம் தூக்கி எறிந்தது அம்மா பட்டாம்பூச்சி.

மேலும் சில வண்ணமற்ற பட்டாம்பூச்சிகளை நட்பாய் கொண்டு,

பல வண்ணம் பூசி விளையாடி கொண்டிருக்கும் ஆண் பட்டாம்பூச்சிகளை ஏக்க கண்களுடன் பார்த்து கொண்டிருந்தது இந்த பட்டாம்பூச்சி..

பெண் விடுதலை, பெண்ணியம் என பேசித்திரிந்த சிலரும், வண்ணமில்லா சில பட்டாம்பூச்சிகளை கூட்டுக்குள் வைத்து கொண்டு, வண்ணங்களில் அவளுக்கு விருப்பமிருப்பதில்லை என வார்த்தை ஜாலம் காட்டி கொண்டிருந்தன..

காலம் மாற மாற காடு பார்க்கும் ஆசை அதிகமாகி, கொஞ்சம் கொஞ்சமாய் வெளியே சென்று வண்ணங்கள் பார்த்து ரசிக்க துவங்கின அவ்வழகிய பட்டாம்பூச்சிகள்…

குரூர மனம் கொண்ட குளவிகளும், பல்லிகளுமோ,
நிர்பயாக்களுக்கும் ஸ்வாதிகளுக்கும்,
அடர் சிவப்பில் ரத்தவண்ணம் பூசிச்சென்றன..

அப்போது தான் வானத்தையே பார்த்து நீல வண்ணம் அறிய துவங்கியிருந்த சின்ன பட்டாம்பூச்சிகளையும், மாமிச பிண்டங்களாய் மட்டும் பார்த்து,
ஹாசினிகளுக்கும், ரித்திக்காகளுக்கும் கூட அதே அடர் சிவப்பு வண்ணம் கொடுத்தன…

ஆனாலும், நம்பிக்கை இழக்கா பட்டாம்பூச்சிகள் சில இன்னமும் காத்திருக்கின்றன...

இரையாய் அல்ல, இணையாய் கொண்டாடும் பட்டாம்பூச்சி தோட்டம் நிச்சயம் வாய்க்குமென்று 😊



This post first appeared on தமிழ் மொழி, please read the originial post: here

Share the post

வண்ணமில்லா பட்டாம்பூச்சிகள்

×

Subscribe to தமிழ் மொழி

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×