மீண்டும் 2009-க்கு வந்து
சிக்கிக் கொண்டது போல் இருக்கிறது!
மீண்டும் ஓர் இனப்படுகொலையின் அரங்கேற்றம்...
Related Articles
மீண்டும் ஒரு விடுதலை இயக்கத்தின் மீது
தீவிரவாத இயக்கம் என முத்திரை...
மீண்டும் ஏதுமறியா மக்கள்
கொத்துக் கொத்தாகக் கொலை...
மீண்டும் கதறி அழும் குழந்தைகளின் புகைப்படங்கள்
இணையத்தில் உலா...
மீண்டும் குண்டுவீச்சு ஓசைகள்...
மீண்டும் படைவானூர்திகளின் இரைச்சல்கள்...
மீண்டும் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்புகள்...
மீண்டும் ஒருமுறை உலகம்
தன் கண்களை இறுக மூடிக் கொள்ளப் போகிறதா?
அப்படி மூடிக் கொண்டால்
அந்தக் கண்கள்
மீண்டும் திறந்து பார்க்கையில்
காணாமல் போன பாலத்தீனியர்களுள்
நானும் ஒருவனாக இருக்கட்டும்!
படம்: நன்றி தி கார்டியன் இதழ்.
This post first appeared on அகச௠சிவபà¯à®ªà¯à®¤à¯ தமி, please read the originial post: here