"இடுக்கண் வருங்கால் நகுக" என்றார் வள்ளுவர். ஆனால் அண்மைக்காலமாக நாட்டில் நடப்பவற்றையெல்லாம் பார்த்தால் சிரித்துச் சிரித்தே பித்துப் பிடித்து விடும் போல் இருக்கிறது. அவற்றில் ஒன்றுதான் கடந்த ஓரிரு நாட்களாகப் பெரிதும் விவாதத்துக்குள்ளாகி இருக்கும் பொருளாதாரச் சரிவு.
பணமதிப்பு நீக்கம், சரக்கு மற்றும் சேவை வரி, எரிபொருள் விலைத் தீர்மானத்தைத் தனியாரிடம் கையளித்தல் என அடுக்கடுக்காக இவர்கள் கொண்டு வந்த பொருளாதாரச் மாற்றங்களால் மக்களான நாம் ஓட்டாண்டிகளானபொழுது எல்லாம் நாட்டுக்காகத்தானே என்று பொறுத்துக் கொள்ளச் சொன்னார்கள். இப்பொழுது நாட்டுப் பொருளாதாரமும் தள்ளாடுகிறது என்றால் மேலே உள்ள நகைச்சுவைக் காட்சிதான் நினைவுக்கு வந்தது. அதையே இன்றைய நாட்டு நிலைமைக்கேற்பப் பகடிக் காணொலியாக (Video Troll) மாற்றியிருக்கிறேன். ஏதோ இந்தப் பொருளாதார நெருக்கடிக்கு இடையிலும் உங்களைச் சிரிக்க வைக்க என்னாலான முயற்சி.
❀ ❀ ❀ ❀ ❀
காணொலி பிடித்திருந்தால் கீழ்க்காணும் வாக்குப்பட்டைகள் மூலம் மற்றவர்களுடனும் பகிர்ந்து அவர்களையும் சிரிக்க வையுங்களேன்! கூடவே, உங்கள் செம்மையான கருத்துக்களுக்கும் காத்திருக்கிறேன்! தனிப்பட ஏதும் தெரிவிக்க விரும்பினால், கீழே உள்ள 'அணுக' படிவத்தைப் பயன்படுத்தலாம்! This post first appeared on அகச௠சிவபà¯à®ªà¯à®¤à¯ தமி, please read the originial post: here