Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் ! தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு – நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம். நெல்லை மாவட்டத்தில் நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருப்பவர் கேபி ஜெயக்குமார். இவரை காணவில்லை என்று அவரது மகன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்திருந்தார். அந்த வகையில் கடந்த 2 ஆம் தேதி இரவு 7.45 மணிக்கு வீட்டில் இருந்து சென்றதாகவும் அதன்பிறகு கே.பி. ஜெயக்குமார் வீடு திரும்பவில்லை எனவும் கூறியுள்ளார்.

அத்துடன் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக கடந்த மாதம் ஜெயக்குமார் போலீசில் புகார் கொடுத்திருந்தார். இதன் அடிப்படையில் கேபி ஜெயக்குமாரின் மகன் அளித்த புகாரின் பேரில், உவரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில், கரைசுத்து புதூர் அருகே உள்ள தோட்டத்தில் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அத்துடன் ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றிய போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சவுக்கு சங்கர் திடீர் கைது – நீதிமன்றத்திற்கு அழைத்து வந்த போது ஏற்பட்ட விபரீதம் – என்ன நடந்தது?

மேலும் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகியாக இருந்த ஜெயக்குமார் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டு இருப்பது நெல்லை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

The post நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் ! தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு – நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் ! appeared first on SKSpread.



This post first appeared on Jobs And Latest News, please read the originial post: here

Share the post

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாயம் ! தேடப்பட்டு வந்தவர் சடலமாக மீட்பு – நெல்லை பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம் !

×

Subscribe to Jobs And Latest News

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×