காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான்: தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும் இந்திய ஜனநாயக புலிகள் கட்சியின் தலைவருமான மன்சூர் அலிகான் தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டார். இந்நிலையில் இவர் சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதுமட்டுமின்றி அவரிடம் ஒரு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த கடிதத்தில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேர விருப்பம் என்று கூறியுள்ளார்.
Related Articles
உடனுக்குடன் செய்திகளை அறிய “SKSPREAD” Watsapயை பின் தொடருங்கள்!
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ” காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கான கடிதம் கொடுத்துள்ளேன். நான் முதலில் காங்கிரஸ் கட்சியில் தான் இருந்தேன். தற்போது திரும்பவும் தாய் கழகத்தில் இணைய உள்ளேன். இந்திய ஜனநாயக புலிகள் கட்சியை காங்கிரசுடன் இணைக்க முடிவு செய்துள்ளேன். மேலும் பிரதமர் மோடியை ஒரு சாதாரண குடிமகனாக கைது செய்து திகார் சிறையில் அடைக்க வேண்டும்” என்று கூறினார்.
மோடி ராகுலுக்கு திடீரென நோட்டீஸ் அனுப்பிய தேர்தல் ஆணையம் – அனல் பறக்கும் தேர்தல் களம்!!
The post காங்கிரஸ் கட்சியில் இணையும் நடிகர் மன்சூர் அலிகான் – அவரே வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!! appeared first on SKSpread.