Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

விபத்தில் உயிரிழந்த ரசிகர் – நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி

சாலை விபத்தில் உயிரிழந்த தனது ரசிகரின் இல்லத்திற்கு நேரில் சென்ற நடிகர் சூர்யா அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

நிலவும் எதிர்பார்ப்பு

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கங்குவா. சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் இந்த திரைப்படத்திற்கு அதிக அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். மேலும் யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வரு கங்குவா திரைப்படம் 3d தொழில்நுட்பத்துடன் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நேரில் அஞ்சலி

இந்நிலையில், நடிகர் சூர்யா விபத்தில் உயிரிழந்த ரசிகர் வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். சூர்யா நற்பணி இயக்கத்தைச் சேர்ந்த அரவிந்த் என்பவர், கடந்த மாதம் 24 ஆம் தேதி சாலை விபத்தில் உயிரிழந்தார். இந்த செய்தியறிந்த நடிகர் சூர்யா எண்ணூரில் உள்ள ரசிகரின் வீட்டுக்கு நேரில் சென்று தனது அஞ்சலியை செலுத்திவிட்டு, அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

The post விபத்தில் உயிரிழந்த ரசிகர் – நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி appeared first on Little talks - Entertainment News Website.



This post first appeared on Get Updated News Through Little Talks!, please read the originial post: here

Share the post

விபத்தில் உயிரிழந்த ரசிகர் – நடிகர் சூர்யா நேரில் அஞ்சலி

×

Subscribe to Get Updated News Through Little Talks!

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×