பி.வாசு இயக்கத்தில் லாகவா லாரன்ஸ், கங்கனா ரணாவத், வடிவேலு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி – 2’ திரைப்படம் செப்டம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் நடிகர் வடிவேலு பேசியதாவது; “மாமன்னன் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அதைவிட வெற்றிப்படமாக ‘சந்திரமுகி 2’ இருக்கும். ‘மாமன்னன்’ல பார்த்த வடிவேலு வேற, ‘சந்திரமுகி 2’ வடிவேலு வேற. இயக்குநர் வாசு என்னிடம் 3 மணி நேரம் கதை சொன்னார். கதையைக் கேட்டு ஆடிப் போய்ட்டேன். இந்தப் படத்துலயும் அதே முருகேசனாக வரேன். எனக்கும் லாரன்ஸ் மாஸ்டருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி நல்லா வந்திருக்கு! அக்கப்போர் பண்ணிருக்கோம்” என்றார்.
Related Articles
The post அது வேற! இது வேற! – வடிவேலு கலகல பேச்சு! appeared first on Little talks - Entertainment News Website.
This post first appeared on Get Updated News Through Little Talks!, please read the originial post: here