Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஆண்களும், பெண்களும் இவற்றை கடைபிடித்தால் மகாலட்சுமி நிரந்திரமாக உங்களிடம் தங்குவாள்


மகாலட்சுமி பார்வை பட

மகாலட்சுமியின் பார்வை தங்கள் மீது படாதா என பலரும் ஏங்குவார்கள்.  அத்தகைய தேவி மகாலட்சுமியின் அருளைப் பெற பல்வேறு பூஜை புனஸ்காரங்கள், விரதம் என எல்லாவற்றையும் கடைபிடிப்பார்கள். அத்தகைய மகாலட்சுமி எந்த இடத்தில் எல்லாம் வாசம் செய்வாள் என பின்வருவனவற்றில் பார்ப்போம்,



மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்கள் :


1
. திருமால் மார்பு

2
. பசுவின் பின்புறம்

3
. யானையின் தந்தம்

4
. தாமரை மலர்

5
. திருவிளக்கு

6
. சந்தனம்

7
. வெற்றிலை

8
. கோமியம்

9
. கன்னிப்பெண்கள்

10
. உள்ளங்கை

11
. பசுமாட்டின் கால்தூசு

12
. வேள்வி புகை

13
. சங்கு

14
. வில்வமரம்

15
. நெல்லி மரம்

16
. தர்ம சிந்தனை உடையாரின் உள்ளம்

17
. வெண்ணிற புறாக்கள் வாழும் இடம்

18
. கலகமில்லாத மகளிர் வாழும் இடம்

19
. தானியக் குவியல்

20
. கல்லும் உமியும் இல்லாத அரிசிக் குவியல்

21
. பணிவுடனும், நல்லசொற்களையும் பேசுபவர்கள்

22
. பகிர்ந்துண்டு வாழும் மனிதர்கள்

23
. நாவடக்கம் உள்ளவர்கள்

24
. மிதமாக உண்பவர்கள்

25
. பெண்களைத் தெய்வமாக நடத்துபவர்கள்

26
. தூய்மையான ஆடை அணிகிறவர்கள்

மேற்கண்ட இவை அனைத்துமே மகாலட்சுமி வாசம் செய்யும் இடங்களாக சாஸ்திரங்களில் குறிபிடப்பட்டுள்ளது. காலையில் எழுந்தவுடன் மேற்கண்டவற்றை பார்த்து எழுவது நல்லது.


பெண்களுக்கு செல்வம் சேர


1. பெண்கள் ஜொலிக்கும் வளையல்களை நிறைய அணிந்து கொள்வது,

2. குங்குமத்தை மாங்கல்யம், நெற்றி, தலைவகிடின் ஆரம்பம் ஆகிய மூன்று இடங்களிலும் மோதிர விரலால் இடுவது,

3. கணவனுக்கு கால்களை பிடித்து விடுவது,

4. இரவு உடுத்திய உடையுடன் காலை வீட்டின் படிகளை தாண்டி வெளியே செல்லாமல் குளித்து விட்டு செல்வது,

5. அன்னத்தை இடது கைகளால் பரிமாறாமல் இருப்பது ,

6. இடது கைகளால் செல்வத்தை பெறுவது, தருவது போன்ற செயல்களை தவிர்ப்பது.

7. ஒற்றை கால்களில் நிற்காமல் இருப்பது ,

8. கோவில்களில் அமர்ந்து தாலி கயிற்றை மாற்றி கொள்வது.

9. அழுக்கான உடைகளை அணிவதை தவிர்ப்பது போன்ற செயல்கள் செல்வ வளத்தை பெண்களுக்கு தரும்.


ஆண்களுக்கு செல்வம் சேர


1. பெண்களை துன்புறுத்தி அல்லது வேதனைபடுத்தி அழவைப்பது போன்ற செயல்களை செய்யாமல் இருப்பது.

2. செவ்வாய் வெள்ளி கிழமைகளில் பெண்களிடம் சண்டை போடாமல் இருப்பது.

3. மல்லிகை போன்ற மலர்களை மனைவிக்கு சூட்டுவது.

4. பகலில் உடலுறவு கொள்ளாமல் இருப்பது.

5. வெட்ட வெளியில் உறவு கொள்ளாமல் இருப்பது.

6. பணத்தை உடலின் முன்பக்கத்தில் (தொடை ,மார்பகம் ) போன்ற இடங்களில் வைத்துக் கொள்வது.

இவற்றை ஆண்கள் பின்பற்றும் பொழுது மகாலட்சுமியின் ஆசி கிடைக்கும் என்று சோதிட நூல்கள் சொல்கிறது.

அனைவரும் இதனை பின்பற்றி லட்சுமி தேவியின் ஆசிகளை பெற்று மேன்மையும், வளமும் பெறுவோமாக. 



This post first appeared on Exprestamil, please read the originial post: here

Share the post

ஆண்களும், பெண்களும் இவற்றை கடைபிடித்தால் மகாலட்சுமி நிரந்திரமாக உங்களிடம் தங்குவாள்

×

Subscribe to Exprestamil

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×