Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64

'மிஸ்ஸியம்மா' (1955):
மிழில் எத்தனையோ நிலா பாடல்கள் இருந்தாலும் 'காதல் மன்னன்' ஜெமினி கணேசன்-சாவித்திரி நடித்து, திரு எல் வி பிரசாத் இயக்கி 'மிஸ்ஸியம்மா' படத்தில் இடம்பெற்ற, திரு ராஜேஸ்வர ராவ் இசையில், அமரக்கவி திரு தஞ்சை ராமயதாஸ் பாடல் வரிகளை திரு ஏ எம் ராஜா, பி லீலா பாடிய 'வாராயோ வெண்ணிலாவே' தமிழின் முன்னோடி நிலா பாடல். இந்தப் பாட்டைப் பிடிக்காதவர்கள் யாரவது உண்டா?. திருமதி பி லீலா பாடிய "என்னை ஆளும் மேரி மாதா" என்ற இன்னொரு பாடல் காலை வேளையில் 'பக்தி பாடல்கள்' வரிசையில் சென்னை வானொலியில் அடிக்கடி ஒளிபரப்புவார்கள். திரு ஏ எம் ராஜா, பி சுசீலா பாடிய "பிருந்தவனமும் நந்தகுமாரனும்"என்ற இன்னொரு இனிய பாடலும் உண்டு. தேனினும் இனிய அபூர்வ குரல் திரு ஏ எம் ராஜாவினுடையது.  தமிழ் சினிமாவின் முன்னோடி பாடகர்.

நிற்க. வங்காள எழுத்தாளர் திரு ரபீந்திரநாத் மைத்ர எழுதிய பெங்காலி சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் கதையைத் தழுவி ஏராளமான படங்கள் வந்திருக்கிறது. இனியும் வரும்.

பள்ளி படிக்கையில் சென்னை தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இந்தப் படம் எனக்கு நிரம்பப் பிடிக்கும் காரணம் 'காதல் மன்னன்' ஜெமினி - சாவித்ரி மட்டுமல்ல, எஸ் வி ரங்காராவின் இயல்பான நடிப்பும் தான். படம் முழுதும் நாயகனின் நண்பனாக வரும் கே ஏ தங்கவேலுவின் நகைச்சுவை நம்மைச் சிரிக்கவைக்கும். அப்போதெல்லாம் 7.00 மணிக்கோ அல்லது 7.30 மணிக்கோ செய்தி இடைவேளை தவிர விளம்பர இடைவேளை போன்று எதுவும் இல்லை. அதனால் சென்னை தொலைக்காட்சியில் படம் பார்ப்பது அலுக்காத விஷயம்.  இந்த படமும் அதுபோல ஒரு ஞாயிற்று கிழமைகளில் பார்த்த ஞாபகம் உண்டு.

இதோ நீங்களும் அந்தப் பாடலை கேளுங்களேன்:




நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     





This post first appeared on My Personal, please read the originial post: here

Share the post

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-64

×

Subscribe to My Personal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×