Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59

'மூடுபனி' (1980)

ளையராஜா சார் இசையமைத்த நிலா பாடல்களில் இதுவும் ஒன்று. நாற்பது
வருடங்களுக்கு முன்பு வெளியான இந்தப் பாடலை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கேட்கலாம், ஒவ்வொரு முறை கேட்கும்போது புதிதாகக் கேட்பது போல இருக்கும்.'நடபைரவி' ராகத்தில் அமைந்த இந்தப் பாடல் பேஸ் கிட்டாரில் தொடங்கி, தசேட்டனின் குரலில் இணைந்து கோரசோடு பயணித்து மெல்ல நம்மை ஆக்கிரமிக்கும்.

1980-ஆம் ஆண்டுத் தீபாவளி அன்று வெளியான 'மூடுபனி' படத்தில் இடம்பெற்ற ''என் இனிய பொன் நிலாவே..." தான் மேலே சொன்ன பாடல். 'மூடுபனி' படத்திலிருந்து தான் தமிழ் சினிமாவின் மேஜிக்கல் காம்போ இயக்குநர் பாலுமகேந்திரா- இளையராஜா இணை ஆரம்பமானது.

நானும் நினைத்திருந்தேன் இந்தப் பாடலை பெண் குரலில் கேட்டல் எப்படி இருக்குமென்று? சமீபத்தில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாவின் இன்னிசை கச்சேரியில் இந்தப் பாடலை பெண் பாடகர்கள் கோரஸாகப் பாடி கேட்டது இன்னொரு பரவசமான அனுபவமாக இருந்தது.

நீங்களும் அந்த பாடலை ஒரு முறை கேளுங்களேன்:





நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.




- காளிகபாலி     







This post first appeared on My Personal, please read the originial post: here

Share the post

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-59

×

Subscribe to My Personal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×