Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-55

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-55

7G ரெயின்போ காலனி (2004)

'சத்திரியன்' படத்தில் ஸ்வர்ணலதா பாடிய "அடடா நானும் மீனைப் போலக் கடலில் வாழக்கூடுமோ..........." என்ற கவிஞர் வாலியின் வரிகளுக்குச் சற்றும் குறைவில்லாத வரி மறைந்த கவிஞர் நா முத்துக்குமார் எழுதி ஹரிஷ்-மதுமிதா பாடிய "கானா காணும் காலங்கள் .."பாடலில் வரும் இந்த வைர வரிகள் "தாயோடும் சிறு தயக்கங்கள் இருக்கும் தோழமையில் அது கிடையாதே.." படத்தின் மொத்த கதையையுமே இந்த வரிகள் சொல்லிவிடும். பாடலின் இடையே வரும் ஆலாபனை அருமை.

இயக்குநர் செல்வராகவன்-இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் சேர்ந்த படங்கள் எனக்குப் பிடிக்கும். அதில் '7G ரெயின்போ காலனி' என் மனதுக்கு நெருக்கமான படம். பதின்பருவ காதலை மனதுக்கு மிக நெருக்கமாகச் சொன்ன படம் '7G ரெயின்போ காலனி'. அனிதா-கதிர் கதாபாத்திரங்களை அவ்வளவு சீக்கிரத்தில் யாரும் மறந்துவிட முடியாது, இந்தக் கதாபாத்திரங்கள் என்னை மிகவும் பாதித்தது. காரணம் கதிர் போல எனக்கும் ஒரு நண்பன் இருந்தான். அவனுடைய வலிகளையும் வேதனைகளையும் அருகிலிருந்து பார்த்தவன் நான். காலம் அவனுக்கு ஒரு மிகப்பெரிய மாறுதலைக் கொடுத்தது எனக்குச் சந்தோசம்.

இயக்குநர் செல்வராகவன் - யுவன் - மறைந்த கவிஞர் நா முத்துக்குமார் கூட்டணி பல நல்ல பாடல்களைத் தந்துள்ளது '7G ரெயின்போ காலனி' படத்தில் அவர்கள் நிகழ்த்திய அந்த மாயாஜாலம் இதோ:



நன்றி: Youtube


குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.


- காளிகபாலி     




This post first appeared on My Personal, please read the originial post: here

Share the post

ஒரு முறை நிகழும் மாயாஜாலம்-55

×

Subscribe to My Personal

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×