பயணங்கள் முடிவதில்லை (1982)
'லொக்கு, லொக்கு-வென்று இருமல் சத்தம் கைப்பேசி வழியே கேட்ட போது நமக்கே கொரோனா வந்துவிடும் போலிருந்தது.
எனக்கு இரண்டு விஷயங்கள் ஞாபகம் வருகிறது. ஒன்று. இயக்குநர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'எதிர்நீச்சல்' படத்தில் வரும் 'இருமல்' தாத்தா என்ற கதாபாத்திரம். கடைசி வரை அக்கதாபாத்திரத்தை கண்ணிலேயே காண்பிக்கமாட்டார் இயக்குநர். இருமல் சத்தத்தைக் கேட்டு நாமே புரிந்துகொள்ளவேண்டும். இது இயக்குநர் கே பாலசந்தர் 'டச்'.
இரண்டு: இந்த இருமல் சத்தம் தமிழ்நாட்டு பட்டிதொட்டியெங்கும் சினிமா / சென்னை வானொலி / சென்னை தொலைக்காட்சி 'ஒளியும் ஒலியும்' வழியே ஒலித்தது. ஞாயிறு அன்று மாலை நான்கு மணிக்குச் சென்னை வானொலியில் ஒளிபரப்பான 'நேயர் விருப்பம்' நிகழ்ச்சியில் இப்பாடல் கடைசிப் பாடலாக வரும்.
என்ன பாடல் அது: 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் வரும் 'மணியோசை கேட்டு' என்ற பாடலை கதாநாயகன் மோகன் இருமிக்கொண்டே பாடுவார். பாடுவது SPBயா அல்லது கதாநாயகன் மோகனா? யார் பாடுகிறார்கள் என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்குப் பாலுவின் குரலுக்கு மோகன் தத்ரூபமாக இருமிக்கொண்டே வாயசைத்து, பாடி நடித்திருப்பார்.
இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன், ராஜ சார் இணைந்த முதல் மாயாஜால வெற்றி, பல வெற்றிப் படங்களுக்கு அச்சாரமாக அமைந்தது 'பயணங்கள் முடிவதில்லை' கூட்டணி.
இந்தப் பாடல் மட்டுமில்லை 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் வரும் எல்லாப் பாடல்களும் மக்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டாடித் தீர்த்தார்கள். சரி நீங்களும் கீழே உள்ள பாடலை முழுமையாகக் கேளுங்கள் :
எனக்கு இரண்டு விஷயங்கள் ஞாபகம் வருகிறது. ஒன்று. இயக்குநர் இமயம் கே பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த 'எதிர்நீச்சல்' படத்தில் வரும் 'இருமல்' தாத்தா என்ற கதாபாத்திரம். கடைசி வரை அக்கதாபாத்திரத்தை கண்ணிலேயே காண்பிக்கமாட்டார் இயக்குநர். இருமல் சத்தத்தைக் கேட்டு நாமே புரிந்துகொள்ளவேண்டும். இது இயக்குநர் கே பாலசந்தர் 'டச்'.
இரண்டு: இந்த இருமல் சத்தம் தமிழ்நாட்டு பட்டிதொட்டியெங்கும் சினிமா / சென்னை வானொலி / சென்னை தொலைக்காட்சி 'ஒளியும் ஒலியும்' வழியே ஒலித்தது. ஞாயிறு அன்று மாலை நான்கு மணிக்குச் சென்னை வானொலியில் ஒளிபரப்பான 'நேயர் விருப்பம்' நிகழ்ச்சியில் இப்பாடல் கடைசிப் பாடலாக வரும்.
என்ன பாடல் அது: 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் வரும் 'மணியோசை கேட்டு' என்ற பாடலை கதாநாயகன் மோகன் இருமிக்கொண்டே பாடுவார். பாடுவது SPBயா அல்லது கதாநாயகன் மோகனா? யார் பாடுகிறார்கள் என்று கண்டுபிடிக்கமுடியாத அளவுக்குப் பாலுவின் குரலுக்கு மோகன் தத்ரூபமாக இருமிக்கொண்டே வாயசைத்து, பாடி நடித்திருப்பார்.
இயக்குநர் ஆர் சுந்தர்ராஜன், ராஜ சார் இணைந்த முதல் மாயாஜால வெற்றி, பல வெற்றிப் படங்களுக்கு அச்சாரமாக அமைந்தது 'பயணங்கள் முடிவதில்லை' கூட்டணி.
இந்தப் பாடல் மட்டுமில்லை 'பயணங்கள் முடிவதில்லை' படத்தில் வரும் எல்லாப் பாடல்களும் மக்கள் திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டாடித் தீர்த்தார்கள். சரி நீங்களும் கீழே உள்ள பாடலை முழுமையாகக் கேளுங்கள் :
Related Articles
நன்றி: Youtube
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி
குறிப்பு: இது என்னுடைய அறிவுக்கு எட்டிய, என்னுடைய அனுபவம் மட்டுமே.
- காளிகபாலி