ஒரு காட்டில் சிங்கமும், மனிதனும் நண்பர்களாக இருந்து வந்தனர்.
ஒரு நாள் அவர்கள் இருவரும் காட்டு வழியில் நடந்து வந்துக்கிட்டு இருந்தாங்க.
Related Articles
அப்ப இந்த உலகத்தல நாங்கத்தான் மிகவும் பலசாலினு சிங்கம் சொன்னது. அதற்கு இல்ல நாங்க தான் மிகவும் பலசாலினு அந்த மனிதன் சொன்னான்.
இப்படியே மாத்தி மாத்தி தங்கள் கருத்தைக் கூறிக்கொண்டே வந்தார்கள்.
அப்படியே பேசிக்கிட்டு காட்டைக் கடந்து நகரத்துக்கு வந்தாங்க. அங்கே மனிதன் சிங்கத்த அடக்கி அதோட வாயை கிழிக்கிற மாதிரி ஒரு சிலை இருந்தன.
அதைப் பார்த்து மனிதன் கூறினான். இப்ப தெரியுதா மனிதன்தான் பலசாலினு சொன்னான்.
அதைக்கேட்ட சிங்கம் இது மனிதன் செய்த சிலை இதுவே சிங்கம் அந்த சிலையை செஞ்ச வேற மாதிரி இருந்துருக்கும் சொல்லி சிரிச்சிச்சு.
"ஒவ்வொருவர் பார்வை வேறு மாதிரி".