Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

முரசுசொலி கேட்ட நரி (The fox heard a Drum sound)


ஒரு நரி பசியினால் காட்டில் இரை தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்பொழுது ஒரு பெருஞ் சத்தம் கேட்டது. அந்த சத்தத்தைக் கேட்டு நரி நெஞ்சம் துணுக்குற்றது.
தன்னைப் போல இரை தேடிக் கொண்டு ஏதேனும் பெரிய மிருகம் ஒன்று வந்து இருக்கிறோதோ என்று நரி பயந்தது.

தன் பசி தீருமுன் தான் அந்த மிருகத்தின் பசிக்கு விருந்தாதிவிடக் கூடுமோ என்று கலங்கியது.

இருந்தாலும், நரி, தனக்குள் தைரியத்தை ஏற்படுத்திக் கொண்டு இது என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும்.

மெல்ல மெல்ல அது காட்டைச் சுற்றிக்கொண்டு ஒலி வந்த திசை நோக்கிச் சென்று ஒரு போர்க்களத்தையடைந்தது. அங்கு யாரும் இல்லை. ஆனால், அங்கிருந்துதான் ஒலி வந்தது.

நரி, மெல்ல மெல்லெ நெ நெருங்கிச் சென்று பார்த்தது. ஒரு மரத்தடியில் பழைய போர்முரசு ஒன்று கிடந்தது. அதற்கு நேரே மேலே இருந்த மரக்கிளை, காற்றில் மேலும் கீழுமா அசையும் போது, அந்த முரசைத் தட்டியது.

அது தட்டும்போதெல்லாம் பெரும் சத்தம் கேட்டது. இதை நேரில் கண்ட பிறகு, அந்த நரிக்கு, 'பூ! வெறும் தோல் முரசு தானா? இதற்கா நான் இவ்வளவு பயப்பட்டேன்!' என்று சொல்லிக்கொண்டே போய்விட்டது. 


This post first appeared on ThamilSmallStories, please read the originial post: here

Share the post

முரசுசொலி கேட்ட நரி (The fox heard a Drum sound)

×

Subscribe to Thamilsmallstories

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×