பிரேசிலில் 5 வயது சிறுமி ஒருவர் சர்ச் பாதிரியாரால் பாலியல் வன் கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னிடம் பாதிரியார் தவறாக நடந்து கொண்டது குறித்து ஓவிய நோட்டில் அந்த சிறுமி பென்சிலில் வரைந்திருந்த ஓவியங்கள், காண்பவர்களின் மனதை உலுக்கியுள்ளது.
பிரேசிலின் மோன்டர் கிளாரஸ் ( Montes Claros) என்ற நகரில் வசிக்கும் இளம் தம்பதியின் ஐந்து வயது மகள் அருகில் உள்ள ஒரு சர்ச்சுக்கு சென்று ஜோடி சில்வா ,54 என்ற பாதிரியாரிடம் பாடம் பயின்று வந்திருக்கிறாள்.
ஆனால், சில தினங்களாக அந்த பாதிரியாரிடம் பாடம் படிக்க செல்ல மாட்டேன் என அந்த சிறுமி அடம் பிடித்திருக்கிறாள் VIDEO : 5 year old molested by priest, draws heartbreaking sketches of incident Powered by காரணம் தெரியாமல் குழம்பிப்போன சிறுமியின் பெற்றோர், அவளது டிராயிங் நோட்டை எடுத்து ஏதேச்சையாக பார்த்துள்ளனர்.
அதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அதில் ஒரு ஆண், சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்வது போலவும், சிறுமி பயத்துடன் படுத்திருப்பது போலவும் வரையப்பட்டிருந்தது. இதே போல அந்த சிறுமி ஆறு ஓவியங்கள் வரைந்திருந்தார்.
உடனே அந்த சிறுமியின் பெற்றோர், நடந்ததை உணர்ந்து துடித்துப் போயினர். அந்த பாதிரியார் குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பாதிரியாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தான் வன் கொடுமை செய்யப்பட்டது பற்றி சிறுமி வரைந்த ஓவியங்கள் காண்பவர்களின் இதயத்தை உலுக்கியுள்ளது.
பிரேசிலின் மோன்டர் கிளாரஸ் ( Montes Claros) என்ற நகரில் வசிக்கும் இளம் தம்பதியின் ஐந்து வயது மகள் அருகில் உள்ள ஒரு சர்ச்சுக்கு சென்று ஜோடி சில்வா ,54 என்ற பாதிரியாரிடம் பாடம் பயின்று வந்திருக்கிறாள்.
ஆனால், சில தினங்களாக அந்த பாதிரியாரிடம் பாடம் படிக்க செல்ல மாட்டேன் என அந்த சிறுமி அடம் பிடித்திருக்கிறாள் VIDEO : 5 year old molested by priest, draws heartbreaking sketches of incident Powered by காரணம் தெரியாமல் குழம்பிப்போன சிறுமியின் பெற்றோர், அவளது டிராயிங் நோட்டை எடுத்து ஏதேச்சையாக பார்த்துள்ளனர்.
அதை பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அதில் ஒரு ஆண், சிறுமியிடம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயற்சி செய்வது போலவும், சிறுமி பயத்துடன் படுத்திருப்பது போலவும் வரையப்பட்டிருந்தது. இதே போல அந்த சிறுமி ஆறு ஓவியங்கள் வரைந்திருந்தார்.
உடனே அந்த சிறுமியின் பெற்றோர், நடந்ததை உணர்ந்து துடித்துப் போயினர். அந்த பாதிரியார் குறித்து போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் பாதிரியாரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். தான் வன் கொடுமை செய்யப்பட்டது பற்றி சிறுமி வரைந்த ஓவியங்கள் காண்பவர்களின் இதயத்தை உலுக்கியுள்ளது.