பதிவு-1-முயற்சி-
பழமொழி
முயற்சியுடையார்
இகழ்ச்சி
அடையார்
-------பழமொழி
முயற்சி செய்தால்
Related Articles
வெற்றி கிடைக்கும்
என்பது தான்
இந்த பழமொழிக்கு
பொதுவாக
சொல்லப்படும் கருத்து
முயற்சி செய்தால்
வெற்றி கிடைக்கும்
என்றால்
இந்த உலகத்தில்
முயற்சி செய்த
அனைவருக்கும்
வெற்றி கிடைத்து
இருக்க வேண்டும்
அல்லவா
ஆனால்
பெரும்பாலானவர்களுக்கு
முயற்சி செய்தும்
வெற்றி
கிடைக்கவில்லையே ஏன்
இந்த உலகத்தில்
முயற்சி செய்யாதவர்கள்
யார் இருக்கிறார்கள்
இந்த உலகத்தில்
உள்ள அனைவருமே
முயற்சி
செய்தவர்கள் தான்
முயற்சி செய்து
கொண்டிருப்பவர்கள் தான்
இனியும் முயற்சி
செய்யப்
போகிறவர்கள் தான்
முயற்சி செய்யாதவர்கள்
இந்த உலகத்தில்
இருக்கிறார்கள் என்று
யாரையும் சுட்டிக்
காட்ட முடியாது
ஏனென்றால்
முயற்சி செய்யாதவர்கள்
என்று இந்த
உலகத்தில்
யாருமே இல்லை
அப்படி
இருக்கும் போது
முயற்சி செய்தால்
வெற்றி கிடைக்கும்
என்று சொல்பவர்களிடம்
முயற்சி செய்த
பலர் தோல்வியையே
தழுவியது ஏன் என்று
கேள்வி கேட்டால்
அவர்களிடம் எந்த
ஒரு பதிலும் இருக்காது
முயற்சி செய்தால்
வெற்றி கிடைக்கும்
என்று யாராவது
அரிதியிட்டு
சொல்ல முடியுமா
யாராலும் சொல்ல
முடியாது
ஏனென்றால் முயற்சி
செய்த அனைவருக்கும்
வெற்றி என்பது
கிடைக்காது
எம் ஜி ஆர் சிவாஜி
ரஜினி கமல்
ஆகியோர்
சினிமாத்துறையில்
உச்சத்திற்கு
சென்றவர்கள்
உயிரைக் கொடுக்கக்
கூடிய ரசிகரைப்
பெற்றவர்கள்
அளவிட முடியாத
புகழில் திளைத்தவர்கள்
சினிமாத் துறையின்
உச்சத்திற்குச்
சென்றவர்கள்
சினிமாத் துறையில்
சிறப்புகள் பலவற்றைப்
பெற்றவர்கள்
அளவிட முடியாத
பாராட்டுக்களைப்
பெற்றவர்கள்
வாழ்க்கையில்
உயர்வுகளையும்
உயர்வுகளின்
எழில்களையும்
எழில்களின்
சிறப்புகளையும்
சிறப்புகளின்
தன்மைகளையும்
கண்டவர்கள்
நினைத்துப்
பார்க்க முடியாத
உயர்வுகளின்
அரியணைகளைக்
கண்டவர்கள்
இத்தகையவர்கள்
இத்தகைய
சிறப்பைப் பெற்றவர்கள்
சினிமாத் துறையில்
உயர்ந்த நிலையை
அடைவதற்கு
எத்தகைய முயற்சிகளை
எடுத்திருப்பார்கள்
அவர்கள் எடுக்காத
முயற்சிகளே
கிடையாது என்று
சொல்லத்தக்க
வகையில்
எவ்வளவு முயற்சிகளை
எடுத்திருப்பார்கள்
அவர்கள் எடுத்த
முயற்சிகள்
தான் அவர்களை
இந்த அளவிற்கு
உயர்ந்த நிலைக்கு
கொண்டு சென்றிருக்கிறது
என்று சொல்ல முடியுமா
இத்தகைய ஒரு
உயர்ந்த நிலையை
அடைவதற்கு
இவர்கள் மட்டும்
தான் முயற்சி
செய்தார்களா
வேறு யாரும்
முயற்சி
செய்யவில்லையா
முயற்சிகள் எதுவும்
எடுக்கவில்லையா
சினிமாத் துறையில்
உயர்ந்த நிலையை
அடைவதற்கு
லட்சக்கணக்கானவர்கள்
முயற்சி
செய்திருக்கிறார்கள்
முயற்சி செய்து
கொண்டிருக்கிறார்கள்
ஆனால்
முயற்சி செய்தவர்கள்
முயற்சி செய்து
கொண்டிருப்பவர்கள்
யாரும் இத்தகைய
ஒரு உயர்ந்த நிலையை
அடைய வில்லையே
ஏன் என்ற
கேள்வி எழுகிறதே
-------என்றும் அன்புடன்
--------எழுத்தாளர்
K.பாலகங்காதரன்
--------- 10-04-2021
////////////////////////////////
This post first appeared on பாலாவின௠பாரà¯à®µà¯ˆà®¯à®¿à®²à¯ â€à®šà®¿à®¤à¯à®¤à®°à¯à®•à®³à¯â€, please read the originial post: here