Get Even More Visitors To Your Blog, Upgrade To A Business Listing >>

பதிவு-1-முயற்சி- பழமொழி

பதிவு-1-முயற்சி-

பழமொழி

முயற்சியுடையார்

இகழ்ச்சி

அடையார்

-------பழமொழி

முயற்சி செய்தால்

வெற்றி கிடைக்கும்

என்பது தான்

இந்த பழமொழிக்கு

பொதுவாக

சொல்லப்படும் கருத்து

முயற்சி செய்தால்

வெற்றி கிடைக்கும்

என்றால்

இந்த உலகத்தில்

முயற்சி செய்த

அனைவருக்கும்

வெற்றி கிடைத்து

இருக்க வேண்டும்

அல்லவா

ஆனால்

பெரும்பாலானவர்களுக்கு

முயற்சி செய்தும்

வெற்றி

கிடைக்கவில்லையே ஏன்

இந்த உலகத்தில்

முயற்சி செய்யாதவர்கள்

யார் இருக்கிறார்கள்

இந்த உலகத்தில்

உள்ள அனைவருமே

முயற்சி

செய்தவர்கள் தான்

முயற்சி செய்து

கொண்டிருப்பவர்கள் தான்

இனியும் முயற்சி

செய்யப்

போகிறவர்கள் தான்

முயற்சி செய்யாதவர்கள்

இந்த உலகத்தில்

இருக்கிறார்கள் என்று

யாரையும் சுட்டிக்

காட்ட முடியாது

ஏனென்றால்

முயற்சி செய்யாதவர்கள்

என்று இந்த

உலகத்தில்

யாருமே இல்லை

அப்படி

இருக்கும் போது

முயற்சி செய்தால்

வெற்றி கிடைக்கும்

என்று சொல்பவர்களிடம்

முயற்சி செய்த

பலர் தோல்வியையே

தழுவியது ஏன் என்று

கேள்வி கேட்டால்

அவர்களிடம் எந்த

ஒரு பதிலும் இருக்காது

முயற்சி செய்தால்

வெற்றி கிடைக்கும்

என்று யாராவது

அரிதியிட்டு

சொல்ல முடியுமா

யாராலும் சொல்ல

முடியாது

ஏனென்றால் முயற்சி

செய்த அனைவருக்கும்

வெற்றி என்பது

கிடைக்காது

எம் ஜி ஆர் சிவாஜி

ரஜினி கமல்

ஆகியோர்

சினிமாத்துறையில்

உச்சத்திற்கு

சென்றவர்கள்

உயிரைக் கொடுக்கக்

கூடிய ரசிகரைப்

பெற்றவர்கள்

அளவிட முடியாத

புகழில் திளைத்தவர்கள்

சினிமாத் துறையின்

உச்சத்திற்குச்

சென்றவர்கள்

சினிமாத் துறையில்

சிறப்புகள் பலவற்றைப்

பெற்றவர்கள்

அளவிட முடியாத

பாராட்டுக்களைப்

பெற்றவர்கள்

வாழ்க்கையில்

உயர்வுகளையும்

உயர்வுகளின்

எழில்களையும்

எழில்களின்

சிறப்புகளையும்

சிறப்புகளின்

தன்மைகளையும்

கண்டவர்கள்

நினைத்துப்

பார்க்க முடியாத

உயர்வுகளின்

அரியணைகளைக்

கண்டவர்கள்

இத்தகையவர்கள்

இத்தகைய

சிறப்பைப் பெற்றவர்கள்

சினிமாத் துறையில்

உயர்ந்த நிலையை

அடைவதற்கு

எத்தகைய முயற்சிகளை

எடுத்திருப்பார்கள்

அவர்கள் எடுக்காத

முயற்சிகளே

கிடையாது என்று

சொல்லத்தக்க

வகையில்

எவ்வளவு முயற்சிகளை

எடுத்திருப்பார்கள்

அவர்கள் எடுத்த

முயற்சிகள்

தான் அவர்களை

இந்த அளவிற்கு

உயர்ந்த நிலைக்கு

கொண்டு சென்றிருக்கிறது

என்று சொல்ல முடியுமா

இத்தகைய ஒரு

உயர்ந்த நிலையை

அடைவதற்கு

இவர்கள் மட்டும்

தான் முயற்சி

செய்தார்களா

வேறு யாரும்

முயற்சி

செய்யவில்லையா

முயற்சிகள் எதுவும்

எடுக்கவில்லையா

சினிமாத் துறையில்

உயர்ந்த நிலையை

அடைவதற்கு

லட்சக்கணக்கானவர்கள்

முயற்சி

செய்திருக்கிறார்கள்

முயற்சி செய்து

கொண்டிருக்கிறார்கள்

ஆனால்

முயற்சி செய்தவர்கள்

முயற்சி செய்து

கொண்டிருப்பவர்கள்

யாரும் இத்தகைய

ஒரு உயர்ந்த நிலையை

அடைய வில்லையே

ஏன் என்ற

கேள்வி எழுகிறதே

-------என்றும் அன்புடன்

--------எழுத்தாளர்

K.பாலகங்காதரன்

--------- 10-04-2021

////////////////////////////////

Share the post

பதிவு-1-முயற்சி- பழமொழி

×

Subscribe to பாலாவின் பார்வையில் ”சித்தர்கள்”

Get updates delivered right to your inbox!

Thank you for your subscription

×